சென்னை,ஜன.12- வெளிநாட்டு தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடை பெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தி லிருந்து காணொலி காட்சியில் உரை யாற்றினார். அப்போது முதலமைச்சர் பேசியதன் சுருக்கம் வருமாறு:- “தமிழால் இணைவோம்”என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்து ள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது. மத மாயங்களை யும் சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. அதனால்தான் தமிழால் இணைவோம் என்பதை நமது முழக்கமாகக் கொண்டுள்ளோம். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பல்லாயிரம் மைல் கடந்தும் நாம் ஒன்றாகக் கூடி இருக்கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கிறது. நிலங்கள் பிரிக்கிறது. ஆனாலும் மொழி இணைக் கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு.
‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவித்து 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இந்த வரிசையில்தான், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12 ஆம் தேதி உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கொரோனா என்ற பெருந்தொற்று காலமாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த விழாவை மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்திருப்போம். கொரோனா என்பதால் அது இயலவில்லை.
தமிழ்நாட்டில் இருக்கும் பிளவுக ளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், தொழில் வளர்ச்சி யிலும் முன்னேற்றம் காணுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தா லும் அது தன்னுடைய வேரை விட்டு விடுவதில்லை என்பதைப் போல தமிழை தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள். அரவணைத்து வாழுங்கள். தமிழக த்துக்கு வாருங்கள். உங்களது பிள்ளை களுக்கு தமிழ்நாட்டைக் காட்டுங்கள். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பண்பாட்டிலும் செழிப்பிலும் மேம்பட்ட இனம் நாம் என்பதை அவர்களை அழைத்து வந்து கீழடியை, ஆதிச்ச நல்லூரைக் காட்டுங்கள். இவ்வாறு முதலமைச்சர் பேசினார். இவ்விழாவில் இணைய வழியாக டாக்டர். தனபால் ராமசாமி, ராஜா நடராஜன், மொரிஷியஸ் முன்னாள் அதிபர் பார்லென் வையாபுரி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மலேசிய முன்னாள் அமைச்சர் தத்தோ பி.கமலநாதன், பப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்த மாகாண கவர்னர் சசிந்தரன் முத்துவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.