tamilnadu

ஹஜ் பயணம் : ஒன்றிய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை, மார்ச் 17 - சென்னையிலிருந்து ஹஜ் பயணத்தைத் தொட ங்க மீண்டும் அனுமதி வழங்கிட வேண்டும் என ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து 4 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் ஹஜ் பயணம் மேற்கொள் கின்றனர். மேலும் சென்னை  விமானம் நிலையம் மூலமாக சவூதி அரேபியாவுக்கு கேர ளா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் மற்றும் லட்சத்தீவு களிலிருந்தும் ஏராளமா னோர் ஹஜ் பயணம் சென்று வந்தனர். கோவிட் காரண மாக சென்னை விமான நிலை யத்திலிருந்து பயணம் மேற்கொள்வதற்கு கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் சென்னை யிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடு மாறு தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.