‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழுவின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டு நிதிக்காக, மத்திய சென்னை மாவட்டத்தில் வீடுகள், கடைகள் என மக்களிடம் வசூலிக்கப்பட்ட தொகை 21 லட்சத்து 5 ஆயிரத்து 758 ரூபாய் பணத்தை, மாநிலச் செயற்குழு உறுப்பினரும், மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. வெங்கடேசனிடம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ. சர்வேசன் வழங்கினார். மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.