கும்பகோணம், ஜன.10 - தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியத்தில் சாதிய பாகுபாட்டுடன் நூறு நாள் வேலை வழங்கப்படுவதாக சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல சூரியமூலை, வீராக்கண்ணு ஆகிய ஊராட்சி பகுதிகளில், பட்டி யலினத்தவர்கள் மற்றும் அனைத்து சாதி யினரும் நூறு நாள் வேலை செய்து வரு கின்றனர். ஆனால் மேல சூரிய மூலை, வீராக் கண்ணு ஊராட்சி பகுதிகளில் பட்டி யலின மக்களுக்கு மட்டும் சாதிய பாகு பாடு பார்த்து வேலை வழங்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை யையொட்டி தங்களது செலவினங்களுக்காக நூறு நாள் வேலையை ஒரே நேரத்தில் பட்டியலினத்தவர் மற்றும் அனைத்து சாதியினரும் பார்த்த என்எம்ஆர் பதிவு செய்தும், பட்டியலின மக்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. ஆனால் மற்ற சாதியினருக்கு சம்பளத் தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இச்செயல் நிர்வாகம், சாதிய பாகுபாடு பார்த்து சம்பளம் வழங்குவதாக தெரிகிறது. இம்முறையை முற்றிலுமாக கைவிட வேண்டும். பொங்கல் பண்டிகைக்குள் இதுவரை கூலி வழங்கப்படாத பட்டியலின மக்களுக்கு நூறு நாள் கூலியை உடனே வழங்கவேண்டும். மேலும் இதுபோன்ற சாதிய பாகுபாடுகளை கைவிட வேண்டும். அப்படி கைவிடாத பட்சத்தில் வருகிற தைப்பொங்கலுக்கு முதல் நாள் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றிய அலு வலகம் முன்பு கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.