மதுரை, அக்.4- ஸ்டெர்லைட் குறித்த வழக்குகள் அனைத்தையும் ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வே தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிட்டார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டு மென வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் காவல்துறை 13 பேரை சுட்டுக்கொலை செய்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் ஆலை மூடல் உள்ளிட்ட இது தொடர்பான பல்வேறு வழக்கு கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும், சென்னை உயர்நீதி மன்றத்திலும் நடந்து வந்த நிலையில் வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவ ஞானம் தலைமையிலான அமர்வு கடந்த சில மாதங்களாக விசாரித்து வந்தது. இந்தப் பின்னணியில் கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி சிவஞானம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு நிர்வாக நீதிபதியாக மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக வழக்கறி ஞர் மாசிலாமணி, வெள்ளியன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி சிவஞானம் முன்பு ஆஜராகி ஸ்டெர்லைட் சம்பந்தமான வழக்கு களை ஏற்கனவே விசாரித்த தாங்களே விசாரிக்க வேண்டுமென முறை யிட்டார், அந்த முறையீட்டை கேட்டுக் கொண்ட நீதிபதி, அக்டோபர் 15-ஆம் தேதி வீடியோ கான்பரன்சிங் விசார ணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பித்தார். அன்றைக்கு ஸ்டெர்லைட் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்கு தாரர்களையும் நேரில் ஆஜராக உத்தர விட்ட அவர், அன்றைய விசாரணை யின்போது இந்த முறையீடு தொடர்பாக முடிவெடுக்கப்படும் என உத்தர விட்டார்.