tamilnadu

வேட்பாளர்களால் பேரூராட்சிக்கு ரூ.40 லட்சம் வசூல்

சேலம்,பிப்.6- தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலனையின்போது வேட்பா ளர்கள் உள்ளாட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள், வாடகைகளை முறை யாக செலுத்தியிருந்தால் மட்டுமே அவர்க ளது வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் என்ற தேர்தல் விதி உள்ளது. அந்த வகையில் பெரும்பாலான வேட்பா ளர்கள் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு செலுத்தவேண்டிய வரியினங்கள், வாடகைகளை பாக்கியின்றி செலுத்தினர். அதன்பிறகே அவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி யில் 18 வார்டுகளில் போட்டியிட 102 பேர் மனு தாக்கல் செய்தனர். இதில் பேரூராட்சி வணிக வளாகத்தில் ஏலம் எடுத்துள்ள 2 பேர் தங்களது 2 ஆண்டு வாடகை நிலுவை தொகை ரூ.35 லட்சம், மற்ற வேட்பாளர்கள் மூலம் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் வசூலானது.