ரயில்களில் கூடுதல் நெல் மூட்டைகளை வரவழைத்து வாழ்வாதாரத்தை பாதுகாத்திடுக! சுமைப் பணி தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 18 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை கூடுதலாக கொண்டு வந்து திருச்சி ரயில்வே குட்செட்டில் வேலை செய்யும் 350-க்கும் மேற்பட்ட சுமைப் பணி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க வலியுறுத்தி சிஐடியு திருச்சி குட்செட் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திருச்சி மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு நடந்த மனு கொடுக்கும் போராட்டத்திற்கு சங்க தலைவர் சேகர் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் சிவக்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் ராசப்பன் ஆகியோர் பேசினர். பின்னர் மண்டல மேலாளரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “திருச்சி ரயில்வே குட்செட்டில் ரயில் வேகன் மூலம் டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை இறக்கி அரவைக்காக திருச்சி மாவட்டத்தைச் சுற்றியுள்ள ரைஸ் மில்களுக்கு லாரிகளில் ஏற்றி விடும் பணியை செய்து வருகிறோம். இந்த பணியில் சுமைப் பணி தொழிலாளர்கள் சுமார் 150 பேரும், லாரி ஓட்டுநர்கள், இதரப்பணி செய்வோர் 100 பேரும், நேரடியாகவும், மறைமுகமாக வும் மில் இறக்கும் தொழிலாளர்கள் 100 பேர் உட்பட சுமார் 350 பேர் இந்த ரயில்வே குட்செட்டின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணி பக் கழக வேலைவாய்ப்பை நம்பி வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் சமீப காலமாக, ரயில்வே வேகன் மூலம் நெல் வரத்து அறவே இல்லா மல் தொழிலாளர்கள் 350 பேரும் வாழ்வா தாரத்தை இழந்து தவிக்கிறோம். எனவே தாங்கள் இதில் தலையிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டை களை திருச்சி ரயில்வே குட்செட்டிற்கு ரயில் வேகன்களில் கொண்டு வந்து தொழிலா ளர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தனர். மனுவை மண்டல மேலாளரிடம் கொடுத்த போது, நிர்வாகிகள் ஆனந்த் ஈஸ்வரன், வீர பாண்டியன், சிவனேசன், பூமிநாதன், வெள்ளைச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.