சென்னை,டிச.14- பொங்கல் பண்டிகையை யொட்டி சென்னையில் இருந்து மக்கள் சொந்த ஊர்க ளுக்கு செல்ல சிறப்பு பேருந் ந்துகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகை கொண் டாடப்படவுள்ள நிலையில், 12 மற்றும் 13ஆம் தேதிகளில் வெளியூர் செல்ல சிறப்பு பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. www.tnstc.in என்ற இணை யதளத்தில் முன்பதிவு நடை பெற்றுவரும் நிலையில், இதுவரை 17 ஆயிரம் பேர் பயணச்சீட்டுகளை பதிவு செய்திருப்பதாக போக்கு வரத்துத்துறை தெரிவித்துள் ளது. ஆன்லைன் மட்டுமின்றி கோயம்பேடு பேருந்து நிலை யத்திலும் முன்பதிவு செய் யப்பட்டு வருகிறது. பொங் கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட உள்ள சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை, அவை இயக்கப்பட உள்ள இடங்களின் விவரங்கள் குறித்து இம்மாத இறுதியில் அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.