tamilnadu

img

அறிவுத் தாகம் தீர்த்த புத்தகக் கண்காட்சி

மாநில மாநாட்டில் பாரதி புத்தகாலயம், என்சிபிஎச் உள்ளிட்ட புத்தக விற்பனையாளர்கள் புத்தகக் கண்காட்சி அரங்கு அமைத்திருந்தனர். மாநாட்டுப் பிரதிநிதிகள், பார்வையாளர்கள், மதுரை மக்கள் ஏராளமானோர் தங்களது அறிவுத் தாகத்திற்கு இங்கே புத்தகங்களை வாங்கிச் சென்றனர். பாரதி புத்தகாலயம் 300 தலைப்புகளில் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வந்ததிருந்தது. இதில் ஏ.ஜி.நூரணி எழுதி பிரண்ட்லைன் விஜயசங்கர் தமிழில் மொழி பெயர்த்திருந்த “ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தல்”, கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதிய “ஆர்எஸ்எஸ் ஒரு திரை விலக்கம்”, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் எழுதிய சாதி- வர்க்கம்-விடுதலை, தெய்வமே சாட்சி, வணிகம், கருத்தியல், நகர்மயம், ஒரு புரட்சியாளரின் பயணம் என்ற நூல்கள் அதிக அளவில் விற்பனையானதாக பாரதி புத்தகாலயம் தெரிவித்துள்ளது. இங்கு மூன்று நாட்களில் சுமார் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. என்சிபிஎச் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட இடதுசாரி தத்துவார்த்த நூல்களும் ஏராளமாக விற்பனையாகியுள்ளது.