இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நவரத்தினங்களில் ஒருவரான தோழர் பி.ராமமூர்த்தியின் நினைவு சொற்பொழிவு வியாழனன்று (டிச.14) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கி.ரமேஷ் எழுதி பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ள ‘பி.ராமமூர்த்தி வாழ்க்கை வரலாறு ‘ நூலை கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வெளியிட, பி.ஆர்.புதல்விகள் மருத்துவர் பொன்னி, வழக்கறிஞர் ஆர்.வைகை ஆகியோர் பெற்றுக்கொண்டனர். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மத்தியக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத் மற்றும் பி.ஆர்.நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் உடன் உள்ளனர்.