திருப்பூர், ஏப்.25 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ‘‘இளைஞர்களுக்கு வேலை கேட்டு’’ திருச்சி நோக்கி செல்லும் மேற்கு மண்டல சைக்கிள் பிரச்சாரப் பயணக் குழு விற்கு திருப்பூர் மாவட்டத்தில் 40 இடங் களில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. செல்லும் இடங்களில் எல்லாம் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும், பூர்ண கும்ப மரியாதை, பழங்கள், குளிர்பானங்கள் வழங்கியும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் சி.பாலச்சந்திர போஸ், திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், கோவை மாவட்டச் செய லாளர் கே.எஸ்.கனகராஜ் ஆகியோர் தலை மையில் 35 பேர் 10 நாள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். பயணக் குழுவினர் அன்னூர் வழியாக ஏப்ரல் 22-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் கருவலூரை வந்தடைந்தனர்.
அங்கு பிரச்சாரக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஆட்டையம்பாளையம், அவிநாசி, வஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் திருப்பூர் தெற்கு ஒன்றியம் மங்கலம், சீராணம்பாளையம், இடுவாய் பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏப்ரல் 23-ஆம் தேதி பல்லடம் அறி வொளி நகர் பகுதியில் இந்த குழு வினருக்கு இஸ்லாமியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து சேகாம்பாளையம் பகுதியில் பெண்கள் பெருமளவு திரண்டு வரவேற்பு அளித்த னர். அருள்புரம் பகுதியிலும் இளைஞர்கள், பொதுமக்கள் திரண்டு வாலிபர் சங்கத்தின் பிரச்சாரப் பயணக் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். திருப்பூர் மாநகரில் வீரபாண்டி பிரிவில் தொடங்கி நகரின் பல்வேறு பகுதிகளிலும் சென்ற இக்குழுவினருக்கு சரவெடிகள் வெடித்து, மலர் தூவி வரவேற்பு அளிக்கப் பட்டது.
தியாகிகளுக்கு அஞ்சலி
விடுதலைப் போராட்ட வீரர், திருப்பூர் தியாகி கொடி காத்த குமரன் நினை விடத்தில் வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சாரப் பயணக் குழு அஞ்சலி செலுத்தினர். பிரச்சார நோக்கத்தை விளக்கிப் பொது மக்களிடம் பேசினர். இதைத் தொடர்ந்து திருப்பூர் அவிநாசி சாலை எஸ்ஏபி.பகுதி, காந்தி நகர் ஆஷர் மில் தியாகி பழனிசாமி நினை விடத்திலும் அஞ்சலி செலுத்தினர். அங்கேரி பாளையம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 23-ஆம் தேதி இரவு அனுப்பர்பாளை யம் புதூர் கோவை டிபார்ட்மெண்டல் ஸ்டோர் அருகே மழை பெய்த நிலையிலும் பிரச்சாரக் குழுவின் நோக்கத்தை விளக்கிப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி, வாலிபர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் செ. முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் ச.நந்தகோபால் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பயணக் குழு சார்பில் மாநில துணைச் செயலாளர் சி.பாலச்சந்திர போஸ், செ.மணிகண்டன் ஆகியோரும் உரையாற்றினர். இதையடுத்து ஞாயிறன்று தண்ணீர் பந்தல், பூண்டி, சுற்றுச் சாலை ஏவிபி பள்ளி சாலை, செட்டிபாளையம் பிரிவு, பூலுவபட்டி, தோட்டத்துப்பாளையம், நெருப்பெரிச்சல், வாலிபாளையம், கூலிபாளையம் நால் ரோடு ஆகிய பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இளைஞர்களுக்கு வேலை கேட்டு வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டிருப்பதை அறிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதி முக, காங்கிரஸ், கொமதேக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் நிர்வாகிகள் நேரில் வந்து வாழ்த்துத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஊத்துக்குளி வட்டத்தில் வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சாரப் பயணக் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சர்க் கார் பெரியபாளையம், ஊத்துக்குளி ரயிலடி, ஊத்துக்குளி நகரம், கரைப் பாளையம், பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிளைகள் சார்பில் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்ததும், பொருளுதவி, பண உதவி அளித்து சைக்கிள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இளம் தோழர்களுக்கு ஊக்கத்தை அளித்ததும் பாராட்டத்தக்க நிகழ்வு. பல்லகவுண்டன்பாளையம் கிளையில் தொழிற்சங்கம், மாதர், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து வரவேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் வாழ்த்தினர். கடுமையான வெயிலிலும் தாய்மார்கள், கட்சி அணியினர் திரண்டு நின்று வரவேற்ற நிகழ்வும், இந்த பய ணத்தை குறித்து கேட்டறிந்த பொது மக்களும் வாலிபர் சங்கத்தின் இந்த மகத்தான இயக்கத்தை வாழ்த்தினர்.