சென்னை, ஜூன் 20- நாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் அக்னிபாதை திட்டத்தை கைவிட வலியுறுத்தி வாலிபர் சங்கத்தினர் ஆவேச போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அக்னி பாதை திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த 6 ஆவது நாளாக போராடி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் நுங்கம்பாக்கத்திலுள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தள்ளுமுள்ளு-தடியடி-கைது
இதையடுத்து திங்களன்று (ஜூன் 20) காலை 10 மணியிலிருந்து குவியத் தொடங்கிய வாலிபர், சாஸ்திரி பவனை நோக்கி ஊர்வல மாக வந்தனர். அப்போது ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். மேலும், மோடி யின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். அப்போது, தடுப்பு வேலியை அமைத்து மேலும் முன்னேறவிடாமல் போராட்டத்தை தடுத்து நிறுத்தியதால் காவல்துறையினருக்கும் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் தென் சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் என்ப வருக்கு இடது கை தோள் பட்டை இறங்கியது. இதனால் அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு மத்திய சென்னை மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். வடசென்னை மாவட்டச் செயலா ளர் எஸ்.பி.சரவணத்தமிழன், பொருளாளர் முருகேசன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் டி.சந்துரு உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.
மதுரை
இளைஞர்களின் ராணுவக் கனவை சீர்குலைத்து, நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ஒன்றிய பாஜக அரசின் அக்னி பாதை திட்டத்திற்கு எதிராகவும் இத்திட்டத்தை கைவிடக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஜூன் 20 திங்களன்று மதுரை ரயில் நிலையம் முன்பு மறியல் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வாலிபர் சங்க மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் பி. கோபிநாத், செயலாளர் டி. செல்வா, பொருளாளர் அ. பாவேல் சிந்தன், துணைச் செயலாளர் எஸ். சரண், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ். வேல்தேவா, தலைவர் க. பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேருந்து நிலையத்தில் பேருந்தை விட்டு இறங்கும் போதே போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். ரயில் நிலையத்திற்குள் செல்லவிடாமல் தடுப்புகளை போட்டு தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து ரயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று, கைது செய்து, வாகனங்களில் ஏற்றினர். அப்போது நிகழ்ந்த சிறு தள்ளுமுள்ளுவில் வாலிபர் சங்க நிர்வாகிகள் விக்கி, திலீபன், சீமான் ஆகியோருக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டது. பலபேரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன. இதனால் மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.