சென்னை,ஏப்.7- வன்னியர் இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லு நர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் வியா ழனன்று(ஏப்.7) கேள்வி நேரத்திற்கு பிறகு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஜி.கே.மணி (பாமக), செல்வ பெருந்தகை (காங்கிரஸ்), வேல்முரு கன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசுகையில், “வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும்”என்றனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,“பல காலமாக போராடிய வன்னிய மக்களின் கோரிக் கைகளை நிறைவேற்றும் அடிப்படை யில் தான் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டமாக கொண்டுவரப்பட்டது என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வன்னி யர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு வழங்கக்கூடிய “தமிழ் நாடு சட்டம் 8/2001 தொடர்பாக உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் அனுபவ முள்ள மூத்த வழக்கறிஞர்களை கொண்டு தமிழ்நாடு அரசு தீவிரமாக வாதாடியது”என்றார். இந்தச் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான பரிந்துரை 2012-இல் வழங்கப்பட்டது. ஆனால், இதற்கான சட்டமுன்வடிவு எப்பொழுது வந்தது என்றால், 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பும் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரை மணி நேரத் திற்கு முன்பாக, அவசர அவசரமாக கொண்டுவரப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இந்தச் சிறப்பு ஒதுக்கீடு சட்டம் மாநிலத்தின் சமூக நீதிப் பிரச்சினை. ஆகவே, சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்றும் முதல்வர் கூறினார்.