செந்தொண்டர் பேரணியில் பங்கேற்றவர்களுக்கு பெரம்பலூரில் பாராட்டு விழா
பெரம்பலூர், மே 31- 24 ஆவது அகில இந்திய மாநாடு அண்மையில் மதுரையில் நடைப்பெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்டம் சார்பில் செந்தொண்டர் பேரணியில் பங்கேற்ற தோழர்களுக்கு சனிக்கிழமை அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பாராட்டு விழா நடைப்பெற்றது. மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். செந்தொண்டர் கன்வீனர் ரெங்கநாதன் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் சாமி. நடராஜன் கலந்துகொண்டு அனைவரையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். அதே போல மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லதுரை, ஏ.கே.ராஜேந்திரன், டாக்டர். கருணாகரன், எஸ். அகஸ்டின், ஏ.கலையரசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.