சென்னை, அக்.10- காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும் புதூரில் போராட்டம் நடத்தி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு அந்த மான் நிக்கோபார் தீவுத் தொழி லாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிஐடியு அந்தமான் - நிக்கோபார் மாநிலக் குழு சார்பில் அக்.8 அன்று போர்ட் பிளேயரில் “சென்னையில் உள்ள சாம்சங் தொழிலாளர்களுடன் ஒற்றுமை” என்ற தலைப்பில் தொழிற் சங்க மாநாடு நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் இணைச் செய லாளர் கே.சுவாமிநாதன் பேசினார். திருபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவன பெரும்பாலான தொழிலாளர் கள் தொடங்கியுள்ள தொழிற்சங் கத்தை பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக சாம்சங் நிர்வா கத்தை கடுமையாக சாடினார். ஊதிய உயர்வு மற்றும் பிற சலுகைகளை நிர்வாகம் தீர்க்கவில்லை. திருபெரும்புதூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் மொத்தம் உள்ள 1800 தொழிலாளர்களில் சுமார் 1400 தொழி லாளர்கள் கடந்த செப்டம்பர் 9 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாட்டில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ள ஆட்சியாளர்கள் தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கி அதிக லாபம் ஈட்ட ஆதரவு அளித்து வருகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டில் உள்ள இடதுசாரிக் கட்சி கள் மற்றும் இடதுசாரி தொழிற் சங்கங்கள் மட்டுமே தொழிலாளி வர்க்கத்திற்காக போராடுகின்றன என்றும் சுவாமிநாதன் கூறினார். நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலக் குழுத் துணைத் தலைவர் டி.அய்யப்பன் பேசுகையில், சென்னையில் சாம்சங் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தின் பின்னணியை விளக்கினார். மாநாட்டுக்கு சிஐடியு மாநிலக் குழுத் தலைவர் ஆர்.சுரேந்தி ரன் பிள்ளை தலைமை வகித்து, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார். மாநாட்டில் சிஐடியு பொதுச் செயலாளர் பி.சந்திர சூடன் செயலாளர்கள் எஸ்.பி. காளை ராஜன், ஆனந்த் ராஜன் ஆகியோரும் பேசினர்.