tamilnadu

க.நா.சு.வுக்கு முன் தமிழர்கள் கானகத்திலா திரிந்தார்கள்? - எம்.எஸ்.இராஜகோபால்

“க.நா.சு. இன்றேல் உலக இலக்கியங்களின் அறிமுகம் கிடைத்திருக்காது. ஒரு பத்து பேரை எழுதவும் ஆயிரம் பேரை வாசிக்கவும் செய்தால் போதும் என்பதே க.நா.சு வின் பிரகடனம். - எழுத்தாளர் நா.விச்வநாதன்.

நாவல் இலக்கியம் என்பதே தமிழுக்கு புதிது. தொண்ணூறு ஆண்டு கால வரலாறுதான் நம்மு டைய நாவல் மற்றும் சிறுகதை இலக்கியங்களுக்கு என்று சொல்  லலாம். அதற்கு முன் மாயூரம் வேத நாயகம் பிள்ளை, வடுவூர் துரை சாமி ஐயங்கார், வை.மு. கோதை நாயகி அம்மாள் அ.மாதவையா, என்று ஒரு சிலரே இருந்தனர். அது வரையில் சிறுகதை நாவல் என்  றெல்லாம் நாம் படித்தது ஆங்கி லத்தில் எழுதப்பட்ட அல்லது  ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட உலக இலக்கி யமே. மனோன்மணீயம் கூட தி  சீக்ரெட் வே என்ற ஆங்கில நாவ லின் தழுவல்தான். ஷேக்ஸ்பிய ரின் நாவல்கள் அல்லது நாட கங்களைத்தான் படித்து வந்தோம். நாடகங்களாக நடித்து வந்தோம்.  1910 இலிருந்து சிறுகதை,  நாவல்கள் வங்க மொழியிலி ருந்தும் பிற மொழிகளிலிருந்தும் மொழி பெயர்க்கப்பட்டு வெளி  வரத்தொடங்கின. 1930 களில் சிறு கதைகள் நாவல்கள் எழுதப்பட்டு தமிழில் புனைவிலக்கியம் என்  பது வேகமாக பரவ ஆரம்பித்தது.  சிறுகதைகள் நாவல்கள் ஆகிய வற்றில் வ.ரா. புதுமைப்பித்தன், கல்கி ஆகியோரது பங்களிப்புகள் அளப்பரியன. குறிப்பாக படைப் பாளிகளை ஊக்குவித்து ஆத ரவளிப்பதில் வ.ரா.வின் பங்கு  போற்றுதலுக்குரியது. மணிக்  கொடி இதழின் ஆசிரியராக இருந்த அவரால் சிட்டி, பி.எஸ். இராமையா, கு.ப.ரா.ந.பிச்ச மூர்த்தி, சிதம்பர சுப்ரமணியன், தி.ஜ.ரங்கநாதன் ஆகியவர்கள் மணிக்கொடியால் வளர்ந்தார் கள். சரஸ்வதி கிராம ஊழியன்  ஆகிய இதழ்களும் புனைவிலக்கி யங்களை வளர்த்தன.

நிறைய மராட்டிய மொழி நாவல்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ யும், வங்  காளி நாவல்களை த.நா.குமா ரஸ்வாமியும் சரஸ்வதி இராம்நாத்  தும் மொழிபெயர்த்திருக்கிறார் கள். மலையாள நாவல்கள் மொழி பெயரக்கப்பட்டன. நிறைய  இரஷ்ய மொழி படைப்புகளை மொழி பெயர்த்து நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் குறைந்த விலையில் வெளியிட்டது.  இப்படி மொழி பெயர்ப்பு இலக்கியங்களில் நிறைய பேரு டைய பங்களிப்பு இருக்கிறது.  தொலைக்காட்சியோ அல்லது வேறு எந்த பொழுதுபோக்கு சாத னங்களோ இல்லாத அந்தக் காலத்  தில் வெளியே வேலைக்கு செல்  லாத பெண்களின் படிக்கும் ஆர்  வத்தை கல்கியும் சாண்டில்ய னும் வளர்த்தார்கள். இந்த  இருவருடைய தொடர்கதை களால் வார இதழ்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டன. சிறு வர்கள் தமிழ்வாணன் புனைவு களை விரும்பி படித்தார்கள்.  ஜெயகாந்தன், லா.ச.ரா., ஜெயந்தன், இராஜம் கிருஷ்ணன், தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு,  எம்.வி. வெங்கட்ராம் , தஞ்சை பிர காஷ் போன்றவர்களும் அடுத்து  வந்த சிவசங்கரி, இந்துமதி, மக ரிஷி, சு.சமுத்திரம் போன்றவர் களும் மக்களின் படிக்கும் ஆர்  வத்தை தீர்க்க தங்கள் பங்க ளிப்பை செலுத்தினார்கள். இன் னும் கணக்கற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். 

இதுதான் உண்மை நிலைமை. இதைவிடுத்து ஏதோ தமிழர்கள் எல்லோரும் மரவுரிகள் தரித்துக் கொண்டு கையில் வேலோடு ஜிம்பக ஜிம்போ ஜிம்போ ஜிம்பக ஜிம்போ ஜிம்போ என்று நடனமாடிக் கொண்டிருந்தது போன்று அதைக் கண்ணுற்று வருந்திய க.நா.சு. அவர்கள் தமி ழர்களை உய்விக்க திருவுளம்  கொண்டு பத்து தமிழர்களையா வது எழுதவும் ஆயிரம் தமிழர் களையாவது வாசிக்கவும் வைத்து  அவர்களை கடைத்தேற்றி அவதா ரம் எடுத்ததின் பயனை உலகுக்கு  உணர்த்த அதனை பிரகடனம் செய்  தார் என்று எதற்கு ஒரு நாயக  பிம்பத்தை கட்டமைக்க வேண்டும் என்று தெரியவில்லை. தயவுசெய்து கநாசு வை உணர்ந்து கொள்ள தனிமனம் வேண்டும் என்று பதியாதீர்கள். ஏனென்றால் மனதுக்கெல்லாம் ஸ்டெப்னி கிடையாது.