ஜெய்ப்பூர்,ஏப்.16- உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். இது குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் உலக நாடுகள் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழக பொ துக்குழு கூட்டம் தீர்மானம் நிறைவேற்றி வலி யுறுத்தியுள்ளது. அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் ஜெய்ப்பூர் நகரில் ஏப்ரல் 16 சனிக்கிழமையன்று கோலா கலமாக துவங்கியது.
இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் பற்றியும், இந்தியா எதிர்நோக்கும் சவால்கள் என்பது குறித்த கருத்தரங்கத்துடன் பொதுக்குழு கூட்டம் துவங்கியது. இந்த கருத்தரங்கத்தில், சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் தலை வர்களும், மற்றும் முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டனர். சனிக்கிழமையன்று கூட்டம் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. ஞாயிறன்று இரண்டு அமர்வுகளாக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகரில் நடை பெற்ற அகில இந்திய மாநாட்டுக்குப் பின்னர் நடைபெறும் பொதுக்குழு கூட்டம் இதுவாகும். இந்தியாவில் இன்று நடைபெறும் அரசியல் நிகழ்ச்சி போக்குகள் சம்பந்தமாகவும், சமா தான ஒருமைப்பாட்டு கழகத்தின் எதிர்கால கடமைகள் குறித்தும் விவாதம் நடைபெறு கிறது. சமாதான ஒருமைப்பாட்டு கழக செயல் பாட்டை அகில இந்திய அளவில் ஊக்கு விப்பதற்கான விவாதமும், 2023 இல் நடை பெற உள்ள அகில இந்திய மாநாடு பற்றிய விவா தமும் சனியன்று நடைபெற்றது. ஏகாதிபத்திய யுத்தங்கள், குறிப்பாக உக்ரைனில் நடைபெற்று வரும் போர் குறித்தும் அதனுடைய விளைவு கள் குறித்தும் பிரதிநிதிகள் விவாதித்தனர். உலக அமைதி கோரும் தீர்மானம் நிறை வேற்றப்படும்.
தமிழகத்திலிருந்து அகில இந்திய சமா தான ஒருமைப்பாட்டுக் கழக தமிழக அமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் தலைமையில் டாக்டர் ரவீந்திரநாத், ஆர்.ராஜேந்திரன், கோபி குமார், செந்தில் குமார், சாந்தி ரவீந்திரநாத் உள்பட 6 பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டுள் ளனர். புதுவையிலிருந்து டி.முருகன், எஸ்.ராமச்சந்திரன் உள்பட 6 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து 120-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இன்றைய இந்தியாவில், வகுப்பு வாதத்தினால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை யும், உலக அளவில் ஏகாதிபத்திய நெருக்கடி யால் ஏற்பட்டுள்ள போர்களையும் கண்டித்து, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை கோரி அதற்கான இயக்கத்தை இந்தியா முழுவதும் நடத்துவதற்கான விவாதங்களை பிரதிநிதிகள் நடத்தி முடிவுகளை எடுக்கவுள்ளனர்.