இந்தியா பல்வேறு இனங்கள், மதங்கள், மொழிகள், தேசியங்கள் மற்றும் கலாச்சா ரங்களின் நிலம். இத்தகைய பன்முகத் தன்மை விவசாயத் துறையிலும் காணப்படுகிறது. நாட்டின் 64 சதவிகிதம் மக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயத் துறையிலும் நிலவும் சமத்துவமின்மை, சீரற்ற வளர்ச்சி விவசாயத் தொழிலாளர்களை கணிசமாக பாதிக்கிறது. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சமத்துவமின்மை அதி கரித்துள்ளது. நாட்டில் தற்போது இரண்டு வளர்ச்சி மாதிரிகள் உள்ளன: ஒன்று கேரள மாதிரி. மற்றொன்று மோடி தலைமையிலான மிகைப் படுத்தப்பட்ட பாஜகவின் குஜராத் மாதிரி. கேரள வளர்ச்சி மாதிரியின் வரையறை நரேந்திர மோடி யின் வரையறையிலிருந்து வேறுபட்டது. விவசா யத் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் என உற்பத்தியாளர்கள் உட்பட சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரையும் வளர்ச்சி சென்ற டைந்ததன் விளைவாக எல்டிஎப் அரசாங்கம் உண்மையான வளர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுகிறது.
மக்களைச் சென்றடையாத வளர்ச்சியை கருத்தில் கொள்வதில்லை
ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசை வழிநடத்திய இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் காலத்திலிருந்து பினராயி விஜயன் தலைமையிலான தற்போதைய அரசு வரை விவசாயத் தொழிலாளர்கள் உட்பட அனைவ ருக்கும் நிவாரணம் வழங்குவதில் முன்னணியில் உள்ளது. நிலம் வழங்குவது முதல் நிலமற்ற வர்களுக்கு கோவிட் கால நிவாரணம் மற்றும் ரேசன் விநியோகம் வரை உலக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் எல்டிஎப் அரசு, உழைக்கும் மக்களைச் சென்றடையாத எந்த ஒரு வளர்ச்சியை யும் கருத்தில் கொள்ளவில்லை. முன்பு காங்கிரஸால் வழிநடத்தப்பட்டது போன்று, இப்போது பாஜக தலைமையிலான ஆட்சி கள் வளர்ச்சிக்கு வெவ்வேறு வரையறைகளை அளித்து அதன் அடிப்படையில் தங்கள் கொள்கை களை செயல்படுத்தியுள்ளன. ஆளும் வர்க்கங்க ளுக்கு உதவும் கொள்கைகள் அவை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் நரேந்திர மோடி அரசு கருப்புச் சட்டங்களை கொண்டு வந்தது. விவசாயம், மின்சாரம் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் சட்டங்களின் விளை வாக, விவசாயத் தொழிலாளர்கள், சிறு மற்றும் குறு விவசாயிகள், குத்தகை விவசாயிகள் வேலை மற்றும் அரசாங்கத்தின் சலுகைகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். மூன்று விவசாய சட்டங்கள் ரத்து செய்யப் பட்டாலும், பாதகமான மின் கொள்கை அமல் படுத்தப்படுகிறது. சுயதொழில், உணவுப் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை உறுதி செய்வதே விவசாயத்தின் நோக்கமாகும். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே பணப்பயிர்கள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த பயிர்களை அனுமதிக்க வேண்டும் என்பதே இது வரையிலான கொள்கை. இந்த வழக்கம்தான் நாட்டைக் காப்பாற்றியது. மாறாக, பாஜக கொண்டு வந்த சட்டங்கள் விவசாயத்தை முற்றிலும் வணிகமயமாக்கும் வகையில் உள்ளன. விவசா யத் துறையில் சந்தை சக்திகளின் ஆதிக்கம், தன்னிறைவு மற்றும் உணவுப் பாதுகாப்பை பாதிக்கும். பணக்காரர்கள், பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபத்திற்காக மட்டுமே விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றன.
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நிலம் ஒப்படைப்பு
மொத்தத்தில் கார்ப்பரேட் விவசாயம் விவ சாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மரண தண்டனையாக இருக்கும். அரசு ஆதர வுடன் விவசாய நிலங்களை கார்ப்பரேட் நிறு வனங்கள் கையகப்படுத்தும். ஏழைகளுக்கு அரசு நிலம் வழங்கும் திட்டம் தற்போது புறக்கணிக் கப்படுகிறது. நிலத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் கார்ப்பரேட் சக்திகளிடம் ஒப்படைக்க அரசு நிலக் கழகம் தொடங்கப்பட்டது. பாஜக ஆளும் கர்நாட காவில் ஏழைகள் பயிரிட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டன. கார்ப்பரேட் விவசாயம் முழு மையாக இயந்திரமயமாக்கப்படும். இதனால் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழக்க நேரிடும். கார்ப்பரேட் விவசாயத்தின் முன்னுரிமை லாபம் என்பதால், அவர்கள் பணப் பயிர்கள் அல்லது ஏற்று மதி சார்ந்த பயிர்களை மட்டுமே சாகுபடி செய் வார்கள். அத்தியாவசியப் பொருட்களின் விலையை கார்ப்பரேட் நிறுவனங்களே தீர்மா னிக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அத்தி யாவசியப் பொருட்களின் விலை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. முன்பு செயல்படுத்தப்பட்ட இதேபோன்ற கொள்கைகளின் விளைவு இது வாகும். கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகையால், உணவு தானிய கொள்முதலில் இருந்து இந்திய உணவு கார்ப்பரேசன் (எப்சிஐ) விலகும். சந்தை சக்திகள் உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதால், மக்கள் உணவுப் பாதுகாப்பை இழக்க நேரிடும். அரசின் பின்வாங்கல் பொது விநியோக முறையை அழித்துவிடும். கார்ப்பரேட் விவசாயத்தின் விளை வாக, விவசாயிகள் தொழிலாளிகளாக மாறும் போது கார்ப்பரேட் நிறுவனங்களும் நிலப்பிரபுக் களும் கூலியை மேலும் குறைப்பார்கள். விவசாயத் தொழிலாளர்களில் ஒரு முக்கியப் பிரிவினர் தங்களது அன்றாடக் கூலியுடன் அரசாங்கத் திட்டங்களைச் சார்ந்து வாழ்கின்றனர்.
ஒழித்துக் கட்டும் பாஜக அரசு
இடதுசாரிகளின் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக 2005இல் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முதல் யுபிஏ அரசு அறிமுகப்படுத்தியது. பாஜக அரசாங் கத்தின் கீழ், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக் கான நிதி குறைக்கப்பட்டது, திட்டத்தை பலவீனப் படுத்தியது. ஒதுக்கப்படும் நிதி கூட வேறு தேவை களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இடதுசாரி ஆதரவு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்தத் திட்டத்துக்காக பட்ஜெட்டில் நான்கு சதவிகி தத்தை வழங்கியது, பாஜக அரசு அதை 1.7 சதவிகிதமாகக் குறைத்தது. இத்திட்டத்தில் பொருட்களுக்கான செலவு 40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் கொள்ளை யடிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணியின் கொள்கைகள் மக்கள் நலனுக்கானது என்றால், விவசாயத் தொழிலாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பலியாக்கும் கொள்கை களை மோடி பின்பற்றுகிறார். விவசாயத் தொழி லாளர்களை சாதி, மத அடிப்படையில் பிரித்து பலவீனப்படுத்த மோடி அரசு முயல்கிறது. வேலைவாய்ப்பு, வீடு, உணவுப் பாதுகாப்பு, நிலம், சம உரிமை, அனைவருக்கும் கல்வி, சுகாதாரம் ஆகியவை நமது போராட்டப் பகுதிகளாக இருக்க வேண்டும். பிரச்சாரம் தேசிய மற்றும் உள்ளூர்த் தேவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உள்ளூர்ப் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். சர்வாதிகாரிகள் மக்களால் தோற்கடிக்கப்படுகிறார்கள் என்பதை வரலாற்றின் படிப்பினைகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
-தேசாபிமானியில் இருந்து
தமிழில் : சி.முருகேசன்