tamilnadu

img

ராணுவப் பயிற்சியில் காலத்துக்கேற்ற தொடர் மாற்றம் மிக முக்கியமானது விமானப்படைத் தளபதி பேச்சு

ராணுவப் பயிற்சியில் காலத்துக்கேற்ற தொடர் மாற்றம் மிக முக்கியமானது விமானப்படைத் தளபதி பேச்சு

சென்னை, அக்.24- பாதுகாப்புப் படைகள் எப்போதும் போருக்குத் தயார் நிலையில் இருப்பதற்கு ராணுவப் பயிற்சியில் காலத்துக்கேற்ற தொடர் மாற்றம் மிக முக்கியமானது என்று விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள விமானப் படை யின் பயிற்சி கமாண்ட் தலைமையகத்தில் அக்டோபர் 23,  24 ஆகிய தேதிகளில் பயிற்சி கமாண்ட் தளபதிகள் மாநாடு-2025 நடைபெற்றது. அதற்கு தலைமை வகித்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.  விமானப்படை பயிற்சி கமாண்ட்டின் கீழ் செய்ல்படும் அனைத்து பயிற்சி நிறு வனங்களின் தளபதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பயிற்சி முறை களில் மாற்றம், கட்டமைப்பு வசதிகளை நவீன மயமாக்குதல் மற்றும் இந்திய விமானப்படையின் வளர்ந்து வரும் செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப பயிற்றுவிப்பு நடைமுறைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாநாட்டின் போது, விமானப்படை தளபதி, அனைத்து பயிற்சி நிறுவனங்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்தார். பயிற்சி ஆணையகத்தின்  அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடுகளை அவர் பாராட்டி னார். புதிதாக உருவாகும்   உலகளா விய அச்சுறுத்தல்கள் மற்றும் தொழில்நுட்ப ங்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படை கள் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் வியூகங்களை கையாளுதல் அவசியம் என்று குறிப்பிட்டார்.  நிகழ்வின் ஒரு பகுதியாக, பல்வகை பயிற்சி பிரிவுகளின்  சிறந்த சாதனை களை அங்கீகரிக்கும் விதமாக விமானப்  படை தளபதி கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.