சென்னை, மார்ச் 19 - சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என 2018இல் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தொ டர்பான வழக்குகளை விசா ரிக்க சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நிய மிக்கப்பட்டிருந்தார். அவ ருக்கு தேவையான வசதி களை செய்து கொடுக்க 2018 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை அப்போதைய அரசு செய்து தரவில்லை. இதனையடுத்து பொன்.மாணிக்க வேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதி கேசவலு அமர்வில் விசார ணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக் கறிஞர், இந்த வழக்கு குறித்து பதிலளிக்க அவகாசம் கோரி னார். இதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து, வழக்கை இரண்டு வாரங்க ளுக்கு ஒத்தி வைத்தனர். நீதி மன்ற அவமதிப்பு குறித்து விளக்கம் அளிக்க சம்பந் தப்பட்டவர்களுக்கு உத்தர விட்ட நீதிபதிகள், தவறினால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்படும் என எச்சரித்துள்ளனர்.