மதுரை கடச்சனேந்தல் அருகில் உள்ள அந்தநேரி பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர் சமூக மக்களை இழிவாகப் பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மந்தப்பட்ட அதிகாரி மீது நட வடிக்கை எடுக்கவேண்டும். எங்கள் சமூக மக்களுக்குத் தாமதமின்றிச் சாதிச்சான்றிதழ் வழங்கவேண்டுமென வலியுறுத்தினர்.