tamilnadu

img

தலைமறைவான ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

தலைமறைவான ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை, ஜூன் 29 - திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் காதல் திரு மணம் செய்த வாலிபரை ஏடிஜிபி ஜெயராம் காரில் கடத்திச் சென்று மிரட்டி தாக்கிய விவகாரத்தில் முன்  ஜாமீன் கேட்டு புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், “இந்த விவகாரத்தில் வாலிபர் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட மகேஸ்வரி என்பவர் அளித்த  வாக்குமூலம், போன் உரையாடல்களில் இருந்து, இந்த  சம்பவத்தில் மனுதாரருக்கு தொடர்பு உள்ளது என்பதற்கு ஆரம்பக் கட்ட முகாந்திரங்கள் உள்ளன” எனக் கூறி, கடந்த  ஜூன் 27 ஆம் தேதி ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனுவை  தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கைது நடவடிக்கையில் இருந்து தப்பு வதற்காக ஜெகன் மூர்த்தி தனது குடும்பத்தினருடன் தலை மறைவாகியுள்ளார்.  தற்போது ஜெகன் மூர்த்தி சாலை மார்க்கமாக ஆந்திரா அல்லது கர்நாடகா மாநிலம் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த வழக்கு சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டு, சிபிசிஐடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து ஜெகன்மூர்த்தியை தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர்.  இந்நிலையில், ஜெகன் மூர்த்தி தரப்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.