tamilnadu

img

பாஜகவின் ஊழல்களைப் பட்டியலிட தனிப் புத்தகமே போடலாம்!

பாஜகவின் ஊழல்களைப் பட்டியலிட தனிப் புத்தகமே போடலாம்!

தேனியில் உதயநிதி நையாண்டி

ன அதிமுகவுடன் கூட்டணி  வைத்துக் கொண்டு திமுகவை குறை கூறுவ தற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு  தகுதி இல்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.  தேனியில் திமுக வடக்கு, தெற்கு மாவட்டங்களின் 23 சார்பு அணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர்,  பாஜக ஆட்சியின் ஊழல்களை பட்டியலிட்டு கடுமை யான விமர்சனங்களை வைத்துள்ளார். அமித் ஷா மீதான நேரடித் தாக்குதல் “மதுரைக்கு வந்த அமித் ஷா, ஏராளமான பொய்  செய்திகளை கூறிவிட்டு சென்றார். ஊழல் கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டு திமுகவை  குறை கூறுவதற்கு அமித் ஷாவிற்கு தகுதி உண்டா?” என்று கேள்வி எழுப்பிய துணை முதலமைச்சர், பாஜக ஆட்சியின் ஊழல்களை விரிவாக பட்டியலிட்டார். “பாஜக ஆட்சி ஊழல் குறித்து பேச வேண்டும். அதற்கு தனியாக புத்தகமே போடலாம். மத்தியப்பிர தேசத்தில் ஆசிரியர் நியமன ஊழல், போர் விமா னங்கள் வாங்கியதில் ஊழல் என பட்டியல் போட்டு  கூற வேண்டும்” என்று கூறிய அவர், ஒன்றிய அர சின் இரட்டை நிலைப்பாட்டையும் சுட்டிக்காட்டினார். “உள்துறை அமைச்சர் அமித் ஷா குறை சொல்கிறார். ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து நம்மை பாராட்டி வருகிறது” என்று அமித் ஷாவின் விமர் சனங்களை மறுத்தார். கீழடி ஆய்வுக்கு ஒன்றிய எதிர்ப்பு தமிழ் வரலாற்றின் பழமையை நிரூபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்தும் துணை முதலமைச்சர் கருத்து தெரிவித்தார். “கீழடி ஆய்வு பாஜக அரசுக்கு ஏற்புடையதாக இல்லை. நம்முடைய வரலாறு மேம் பட்டு இருப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை” என்று  தெரிவித்தார். 2026 தேர்தல்: ஒவ்வொரு மணித்துளிகளும் முக்கியம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய  உத்தி வழிகாட்டுதல்களை வழங்கிய துணை முதல மைச்சர், “2026 சட்டசபை தேர்தல் அறிவிக்க இன்னும்  10 மாதங்களே உள்ளன. பிப்ரவரி இறுதியில் அறி வித்துவிடுவர். எனவே அடுத்து வருகிற ஒவ்வொரு மணித்துளியையும் ‘கோல்டன் ஹவர்ஸ்’ ஆக கருத வேண்டும்” என்று உணர்த்தினார். கடந்த தேர்தலைப் போலவே அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என்று குறிப்பிட்ட அவர், “அந்த கூட்டணியை 2026 இல் மக்கள்  விரட்டியடிக்க தயாராக உள்ளனர்” என்று நம்பிக்கை தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை விளக்கம் தஞ்சாவூரில் முதலமைச்சர் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து விளக்கம் அளித்த துணை முதலமைச்சர், “ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் தகுதியுள்ள அனைவருக்கும் மக ளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரி வித்திருந்தார். தற்போது தஞ்சாவூரில் நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜூலை 15இல் கிடைக்காத மகளிர் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். இதையெல்லாம் மக்களிடம் சார்பு அணிகளை சேர்ந்த  நீங்கள் நினைவுப்படுத்த வேண்டும்” என்றார். திமுக நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல்கள் பிரச்சார உத்திகள்: “நம்முடைய சாதனைகளை துண்டறிக்கைகளாக அச்சடித்து மக்களிடம் வழங்க வேண்டும். அவ்வப்போது தெருமுனைகளிலும், திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டு சாதனைகளை எடுத்துக் கூறுங்கள். இதில் ஆடம்பரமான செலவு தேவையே இல்லை”. சமூக ஊடக எச்சரிக்கை: “சமூக ஊடகங்களில் சிறப்பாக செயல்படக்கூடிய காலகட்டம் இது. ஏனெ னில் உண்மை செய்திகளை விட பொய் செய்திகள், வதந்திகள்தான் அதிகமாக பரவுகிறது” என்று எச்சரித் தார். மக்கள் தொடர்பு: “மக்களிடம் தீர்க்க முடியாத பிரச்சனைகள், கோரிக்கைகள் இருக்கும். அதனை தயவு செய்து காது கொடுத்து கேளுங்கள். முடிந்த வரை தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்” என்று அறி வுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செய லாளரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ. பெரியசாமி, தேனி மக்களவை உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், வடக்கு மாவட்டச் செயலாளர் கம்பம்  ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் சரவணக் குமார், ஆ.மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.