சென்னை, ஏப். 5 - தமிழக அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க தில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி த.முரு கேசன் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். முனைவர் ச. மாடசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது:
“அறிவை விரிவு செய்; அறிவியல் புதுமை செய்!’ என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அந்த வகையில், வருங் காலத் தலைமுறைகளின் அறிவை விரிவு செய்து வளர்த்திடவும்; அறி வியல் புதுமைகளைப் பூத்திடச் செய்திட வும்; இளந்தளிர்களின் உள்ளங்களில் புதிய புதிய சிந்தனைகளை விதைத்து வளர்த்திட வேண்டியதும் நமது இன்றி யமையாத கடமை என்பதை உணர்ந்து, இதுவரை, நாட்டில் பல்வேறு கல்விக் கொள்கைகள் உருவாக்கப்பட்டு, நடை முறைப்படுத்தப் பட்டிருக்கின்றன. எனி னும், இன்றைய அறிவியல் யுகம் நொடிதோறும் வளர்ந்து கொண்டிருக் கிறது. ஒருசில ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட எண்ணமுடியாத சில புதுமைகள், இன்றைக்கு மலர்ந்து அறிவு மணம் பரப்புகின்றன. இன்றைய அறி வியல் நாளை பழைமை அடைவது திண்ணம். எனவே, மாணவர்கள் வருங் காலத்தின் அறிவியல் விடிய லைக் காண்பதற்கேற்ப, கல்வி வளர்ச்சிக்கேற்ப புதிய பரிமாணங் களில் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டி யது காலத்தின் கட்டாயமாகிறது. அந்த வகையில், கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழகத்தின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழுவினை அமைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இக்குழுவின் தலைவராக தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசனும், உறுப்பினர் களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர் நேசன், தேசிய கணித அறிவியல் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் ராம சீனு வாசன், யூனிசெப் நிறுனத்தின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வி யியல் எழுத்தாளர் முனைவர் ச. மாட சாமி, நாகப்பட்டினம் மாவட்டம் கிச்சான்குப்பம், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெய தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவானது புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்.” இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டு உள்ளது.