தருமபுரி, மார்ச் 5- தருமபுரியில் சனியன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், 700 காளை கள், 400 வீரர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி – பென்னாகரம் சாலையில் உள்ள டிஎம்சி மைதானத்தில் சனியன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சேலம், தருமபுரி, மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 700 காளைகள் களமிறக்கப்பட்டது. இதேபோல், மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், புதுக்கோட்டை, தரும புரி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர். முன்னதாக, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா முன்னிலையில் வீரர்கள் அனை வரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். வாடிவாசலில் இருந்து சீறிபாய்ந்து வந்த காளைகளை, வீரர்கள் உறுதி யுடன் அடக்கினர். அதேபோல், பல காளைகள் காளையர்களை ஆட்டம் காண செய்தன. இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும் பரிசு கள் வழங்கப்பட்டன. முன்னதாக போட்டி நடைபெறும் வளாகத்தில், காயமடையும் வீரர் களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முதலு தவி சிகிக்சை மையம் அமைக்கப்பட்டி ருந்தது. ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இப்போட்டியை காண ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும், பாது காப்பு பணியில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் தலைமை யில் 100க்கும் மேற்பட்ட காவலர்களும் ஈடுபட்டிருந்தனர்.