tamilnadu

img

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஜன. 5 ஜாக்டோ ஜியோ போராட்டம்

சென்னை, டிச. 26- பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜனவரி 5ஆம் தேதி முதல்வரின் கவனத்தை ஈர்க்  கும் வகையில் மாவட்டத் தலைநக ரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறி வித்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைப்பா ளர்கள் இரா.தாஸ், காந்திராஜன், ஆ. செல்வம் ஆகியோர் சென்னையில் திங்களன்று (டிச.26)  செய்தியா ளர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது, அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் போரட்ட களத்திற்கே நேரில் வந்து, புதிய ஆட்சி அமைந்  தவுடன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.  ஆனால் ஆட்சிக்கு வந்து 18 மாதம் கடந்த பிறகும் இதுவரை கோரிக்கை கள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் லட்சக்க ணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரி யர்களும் கலந்து கொண்ட வாழ்வா தார கோரிக்கை மாநாட்டை சென்னையில் நடத்தினோம். அதில் முதலமைச்சரும் கலந்து கொண்டு படிப்படியாக கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என்று அறிவித்தார். ஆனால் இதுவரை அழைத்துப்பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வில்லை.

ஊதிய முரண்பாடு

பல பின்தங்கிய மாநிலங்களில் கூட பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டன. எனவே தமி ழக அரசும் உடனடியாக பழைய  ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேபோல் அகவிலைப்  படியை ஒன்றிய அரசு அறிவித்த வுடன் அறிவிக்காமல் 6 மாதம் காலம் தாழ்த்தி அறிவிப்பதை கைவிட்டு, உடனடியாக நிலுவையுடன் அக விலைப்படியை வழங்க வேண்டும்.  பல ஆண்டுகளாக தொகுப்பூதியத் தில் பணியாற்றும் அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஊர்புற நூல கர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள்ளிட்டவர்களை காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும்.  இடைநிலை  ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி மற்றும் அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களை அத்துக்கூலி களாக மாற்றும் அரசாணை 115, 139, 152 ரத்து செய்ய வேண்டும். அதே போல் இளைஞர்களின் வேலை வாய்ப்பை கேள்விக் குறியாக்கும் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முதல்வரின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் வரும்  ஜனவரி 5ஆம் தேதி முதற்கட்டமாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலு வலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். ஜனவரி 8ஆம் தேதி மதுரையில் கூடும் ஜாக்டோ ஜியோ  உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத் தில் அடுத்தகட்ட போராட்டம் அறி விக்கப்படும்.  எனவே உடனடியாக தமிழக முதலமைச்சர் ஒருங்கி ணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இச்சந்திப்போது ஒருங்கி ணைப்பாளர்கள் கு.தியாகராஜன், மு.அன்பரசு, பெருமாள்சாமி, ச. மயில், கு.வெங்கடேசன், சேகர் உள்  ளிட்ட பலர் இருந்தனர்.