tamilnadu

img

வாழ்வாதாரம் பறிப்புக்கு எதிராக தென்சென்னையில் 37 நாள் பிரச்சாரம்

சென்னை, ஜூன் 10 - எளிய மக்களின் வாழ் வாதாரம் பறிக்கப்படுவதை எதிர்த்து 37 நாள் பிரச்சார இயக்கத்தை வெள்ளியன்று (ஜூன் 10) தென்சென்னையில் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி இதனை தொடங்கி வைத்தார். ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகள், மாநில உரிமை பறிப்பு, நுழைவு தேர்வுகள் திணிப்பு, சிறு பான்மையினருக்கு எதிரான தாக்குதல் மற்றும் மாநில அரசின் சொத்து வரி உயர்வு, குடியிருப்புகளை அகற்றுதல் உள்ளிட்டவை களை அம்பலப்படுத்தி இந்த பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. ஜூன் 10ந் தேதி தொடங்கி ஜூலை 17 வரை இந்த கிளர்ச்சி பிரச்சாரம் நடைபெறுகிறது. 2000 ஊழி யர்களை கொண்ட 200 குழுக்கள் தினசரி வீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்ய உள்ளது. 200 மையங்களில் பிரச்சாரக் கூட்டங்களும் நடைபெற உள்ளன.

விறகு அடுப்புக்கு மாறிய மக்கள்

வேளச்சேரி பகுதிச் செய லாளர் எஸ்.முகமது ரஃபி தலை மையிலான பிரச்சாரத்தை தரமணியில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய உ.வாசுகி, “பெட்ரோலிய பொருட்களின் மீதான செஸ், சர்சார்ஜ் வரி களை முழுமையாக நீக்கி விலையை குறைக்க வேண்டும், ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும். நூறுநாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கும் நாட்கள், கூலியை அதிகரிக்க வேண்டும். ஒன்றிய அரசு இதற்கான நிதியை அதிகரிக்க வேண்டும். அனைத்து நகரங்களிலும், நகர்ப்புற 100 நாள் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பொது விநியோக முறையை பலப்படுத்த மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப ஒன்றிய அரசு பொருட்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் நடை பெறுகிறது” என்றார். “மாநிலத்தின் ஏற்பட்டுள்ள பெருவாரியான பிரச்ச னைகளுக்கு ஒன்றிய அரசுதான் காரணமாக உள்ளது. பாஜக தலை வர் அண்ணாமலை தின சரி மாநில அரசிடம் கேட்கும் கேள்விகளை, பிரதமரிடம் கேட்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையின்மை, வாழ்வுரிமை, வசிப்பிட உரிமை கோரி மார்க்சிஸ்ட் கட்சி குரல் கொடுக்கிறது. இதற்கு மாறாக பாஜக தலைவர் அண்ணாமலை செயல்படுகிறார்” என்று அவர் குற்றம் சாட்டினார். “கேஸ் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்களில், ஒரு கோடி பேருக்கும் மேல் அடுத்த சிலிண்டரை வாங்கவில்லை. விறகு அடுப்பிற்கு சென்றுள்ள னர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதற்கு உதாரண மாக தரமணி பகுதி உள்ளது” என்றும் அவர் கூறினார்.

குடிமனைப்பட்டா வழங்குக!

சைதாப்பேட்டை பகுதி, ஜோதியம்மாள் நகரில் மாநிலச் செயற்குழு உறுப்பி னர் என்.குணசேகரன் மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ச.லெனின், ம.சித்ரகலா, பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலந்தூர் பகுதி, நங்கநல்லூரில் பகுதிச் செய லாளர் வெங்கடேசன் தலைமை யிலான பிரச்சாரத்தை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ம.சித்ரகலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய வேல்முருகன், “நீர்நிலை, புறம்போக்கு நிலத்தில் உள்ள மக்கள் அச்ச தோடு வாழ்  கின்றனர். தமிழக அரசு புதிய சட்டம் இயற்றி அரசு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்” என்றார்.