சேலத்தில் தீக்கதிர் நாளிதழ் சந்தா வழங்கும் விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மெய்யனூர் சாலை ஐந்து ரோடு பகுதியில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில், 3311 சந்தாவிற்கான 51 லட்சம் ரூபாயை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் தலைவர்கள் வழங்கினர். இந்நிகழ்வில், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி, சேலம் மாவட்டசெயலாளர் மேவை.சண்முகராஜா, கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், ஈரோடு மாவட்ட செயலாளர் ஆர். ரகுராமன், தருமபுரி மாவட்ட செயலாளர் ஏ.குமார், நாமக்கல் மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, தீக்கதிர் பொது மேலாளர் எஸ்.ஏ.மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.