tamilnadu

img

ரூ.30,000 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்

சென்னை,அக்.8- இந்த ஆண்டு ரூ.30,000 கோடியில்  குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு குறித்த  பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மழைநீர் சேகரிப்பு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்து  சமயம் மற்றும் அறநிலையத் துறை  அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர்  சனிக்கிழமையன்று(அக். 8) தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு கூறுகையில், “தமிழ்நாட்டில் கூட்டுக் குடிநீர் திட்டம் குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் 548 இடங்களில் சுமார் ரூ. 4.5 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது”என்றார். குடிநீர் திட்டப் பணிகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டு சுமார் ரூ. 16,000 கோடியில் புதியதாக குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள் ளது என்றும் சுமார் ரூ. 14,000 கோடியில் திட்டப் பணிகளை மேற்கொள்ள ஜைக்கா நிறுவனத்திடமிருந்து நிதி உதவி பெறவும் நடவடிக்கை மேற்  கொள்ளப்பட்டுள்ளது என்றும் இந்த வருடத்தில் மட்டும் சுமார்  ரூ. 30,000 கோடிக்கு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப் படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.