25 ஆயிரம் மாணவிகள், ‘காவல் உதவி’
செயலியை பதிவிறக்கம் செய்து சாதனை
ருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில், ‘காவல் உதவி’ செயலியை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் ஒரே நேரத்தில் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்தனர். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ஆபத்து ஏற்படும் நிமிடத்திலேயே காவல்துறைக்கு தகவல் கொடுக்க உதவும் வகையிலும், பெண்களுடன் எப்பொழுதும் காவல்துறை பாதுகாப்பாக இருக்கும் என்பதை உறுதி செய் யும் விதமாக ‘காவல் உதவி’ என்கிற செயலி உருவாக்கப் பட்டுள்ளது. இந்த செயலியை 25 ஆயிரம் மாணவிகள் ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சி, நாமக்கல் மாவட் டம், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி வளா கத்தில் சனியன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தார். கல்வி நிறு வனங்களின் முதன்மை அலுவலர் சொக்கலிங்கம் வரவேற் றார். கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் சண்முகம், திருச்செங்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ் ணன் மற்றும் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ‘காவல் உதவி 181’ என்ற வடிவத் தில் மாணவிகள் அணிவகுத்து நின்று ஒரே நேரத்தில் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்தனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், திருச் செங்கோட்டில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பாதி வேலை செய்யவில்லையே என கேட்டபோது, சாலை பணிகள் நடந்து வருவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சாலை பணிகள் முடிந்தவுடன் மீண்டும் முழுமையாக இயங் கும், என்றார். காவலர்கள் பற்றாக்குறை என்பது குறித்து கேட்டபோது, மாவட்டத்தை பொருத்தவரை 1400 காவலர்கள் உள்ளனர். இவர்களுக்கான பணிகள் தற்போது கூடுதலாக உள்ளது என்பதை தவிர வேறு பற்றாக்குறை என்பது எதுவும் இல்லை, என்றார்.