tamilnadu

img

2477 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள், உபகரணங்கள்

மதுரையில் நடந்த பிரம்மாண்ட முகாமில் அலிம்கோ நிறுவனம் வழங்கியது

மதுரை, மே 18 - மதுரையில் சுமார் 2,500 மாற்றுத்திற னாளிகளுக்கு ஒன்றிய அரசின்  சமூக வலுவூட்டல் முகாமில் ரூ.2.12 கோடி பெறுமான உபகரணங்கள், உதவிகள்  வழங்கி மாபெரும் சாதனையைப் படைக்க வழி செய்துள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி., காது கேட்கும் கருவி, ஸ்மார்ட்  போன், மூன்று சக்கர வண்டிகள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திற னாளிகளுக்கு கற்பித்தல் உபகர ணங்கள், கான்பூரை தலைமையக மாகக் கொண்ட இந்திய அரசின் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தின் (அலிம்கோ) சார்பில் செயற்கை அவயங்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளுக்கு தேவை யான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா மதுரையில் (மே 19 ) - வியாழனன்று நடைபெற்றது. கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி அக்டோபர்  மாதம் இறுதி வரை மதுரை மாவட்டத் தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்களவை உறுப்பினர் சு.வெங்க டேசன் முன்முயற்சியில் 15 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் 17,776  பேர். முகாம் நடைபெற்ற இடங்களி லேயே 40 முதல் 50 சதவீத மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை, பேருந்து பயண இலவச அட்டை, மாதாந்திர உதவித் தொகை உட்பட அரசின் உதவிகள்பெற்றுத்தரப்பட்டது. 

ஒன்றிய அமைச்சர் வியப்பு

இம்முகாமில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள், உபகர ணங்கள் வழங்க வேண்டிய தேவை  எழுந்தது. அந்த மாற்றுத் திறனாளி களை கணக்கெடுத்து, அவர்களுக்கு தேவையான செயற்கை உறுப்புகள் மற்றும் உபகரணங்களுக்கு அள வெடுத்து சில மாதங்களுக்குள் தயாரித்து அலிம்கோ நிறுவனம் சார்பில் வழங்குவது என அறிவிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து சு.வெங்க டேசன் எம்.பி.யின் தொடர் கண் காணிப்பு மற்றும் கவனத்தின் அடிப் படையில், மேற்கண்ட முகாம்களில் அளவெடுக்கப்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் செயற்கை உறுப்புகள், உபகரணங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றை வழங்கும் விழாவே மதுரையில் வியாழனன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் துறை இணை அமைச்சர் அ.நாராயணசாமி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமைப் பார்த்து வியந்த அவர், “2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2 கோடியே 68 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ள னர். இது மொத்த மக்கள் தொகை யில் 2.2 சதவீதமாகும்” என்றார்.  மேலும், “கடந்த ஒன்பது ஆண்டில் நாடு முழுவதும் 13,891 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ரூ.1,688.71 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 25.19 லட்சம் பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். தமிழ கத்தில் 534 முகாம்கள் மூலம் ரூ.55.38 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 1.18 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தி லேயே நடந்துள்ள மிகப்பெரிய மாற்றுத்திற னாளிகள் நலத்திட்ட நிகழ்வு இதுதான். இந்த  முகாம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக அமைந்  துள்ளது” என்றும் அவர் கூறினார்.

வெறும் உதவி அல்ல... உரிமை!

தொடர்ந்து பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “சமூக வர லாற்றில் இந்த நாள் ஒரு முக்கியமான நாள். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று தில்லி சென்றவுடன் 2019 நவ.4 அன்று சமூக நீதி அதி காரமளித்தல் துறை அமைச்சரைச் சந்தித்து, மதுரை தொகுதியில், மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு முகாம்  நடத்த வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி னேன். பல முறை அமைச்சர்கள், அதிகாரி களைச் சந்தித்து உரையாடியுள்ளேன். 42  மாதங்களுக்குப் பிறகு முயற்சி வெற்றியடைந் துள்ளது. “மாற்றும் மதுரை” என்பதை மதுரை  மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது. நாம் மாற்றுத்  திறனாளிகளுக்கு வெறுமனே உதவி செய்ய வில்லை; மாறாக, அரசியல் சாசனம் வழங்கி யுள்ள அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அந்த உரிமையை இந்திய அரசிடமிருந்து பெற்றுக்கொடுத்துள்ளோம். நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தருவதில், மக்க ளுக்கு கொண்டு சேர்ப்பதில் மதுரை எப்போதும் முதலிடம் வகிக்கும்” என்றார். இவ்விழாவில் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பெ.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ. தளபதி, மு.பூமிநாதன், மதுரை மாநகராட்சி துணைமேயர் டி.நாகராஜன், மாமன்ற உறுப்பி னர்கள் என்.விஜயா, டி.குமாரவேல், வை. ஜென்னியம்மாள், மதுரை மாவட்ட மாற்றுத் திற னாளிகள் நலத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வ லர்கள் மற்றும் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பி னர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.