tamilnadu

img

சிபிஎம் 23-ஆவது அகில இந்திய மாநாட்டு கொடிப்பயணம் தொடங்கியது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது அகில இந்திய மாநாடு கண்ணூரில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் ஏற்றப்பட உள்ள கொடி ஆலப்புழை மாவட்டம் வயலாரிலிருந்து எடுத்து வரப்படுகிறது. இதையொட்டி வயலார் தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம். ஏ.பேபி 23-ஆவது மாநாட்டுக் கொடியை பயணக் குழுத் தலைவர் எம்.சுவராஜிடம் வழங்கினார். கொடிப்பயண ஊர்வலத்தில் 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர். பயணக்குழு எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் பயணம் செய்து கண்ணூரை அடையும்.