tamilnadu

img

22 நகரங்களில் மாரத்தான் : இளைஞர்கள் உற்சாகம்

சென்னை, பிப். 12 - பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த, பலப்படுத்த வலியுறுத்தி ஞாயிறன்று (பிப்.12) மாநிலம் முழு வதும் 22 நகரங்களில் மினி மாரத்தான் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு), முன் னெடுப்பில் பூவுலகின் நண்பர்கள், சென்னை மெட்ரோ ரயில் எம்ப்ளாயீஸ் யூனியன், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி கொள்கை ஆய்வு நிறு வனம், குடிமக்கள் நுகர்வோர், செயல்பாட்டுக் குழு, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை  பெரியார் திராவிடர் கழகம் மற்றும்  அசார் ஆகிய பல்வேறு அமைப்பு களும் இணைந்து இந்த ஓட்டத்தை நடத்தின. குறிப்பிட்ட ஒரு கோரிக்கைக் காக ஒரே நாளில், மாநிலம் முழுவதும்  ஒரே நேரத்தில், 22 இடங்களில் ஒரு  மாரத்தான் நடப்பது இதுவே முதல் முறையாகும்.  இதில் மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக கலந்துகொண்டனர்.  சென்னை பெசன்ட் நகர் கடற்கரை யில் நடைபெற்ற மினி மாரத்தானில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர். ஆண்களுக்கான ஓட்டத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனும், பெண்களுக்கான ஓட்டத்தை பூவுலகின்  நண்பர்கள் அமைப்பின் கோ.சுந்தர்ரா ஜனும் தொடங்கி வைத்தனர். மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அ.சவுந்தரராசன்

போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கி அ.சவுந்தர ராசன் பேசியதாவது: அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள், பூமியை அழித்து  நுகர்வை அதிகப்படுத்தி உள்ளன. உலகத்தின் நுரையீரல் போன்றுள்ள அமேசன் உள்ளிட்ட காடுகளை அழித்து  வருகின்றனர். பல நூறு ஆண்டுகள் கழித்து ஏற்பட வேண்டிய வெப்பநிலை உயர்வை, தற்போதே உயர்த்தி விட்டார்கள். இதன் விளைவுகளை குறைப்பதில் அந்த நாடுகள் கவனம் செலுத்த மறுக்கின்றன. தனி வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு, சாலைகள் அமைப்பதை வைத்து வளர்ச்சி என்கிறார்கள். வாகனப் பெருக்கத்தை நாட்டின் வளர்ச்சி என்று கூறுவது, இயற்கைக்கு மாறான கூற்று. எவ்வளவு அகலமான சாலைகள் போட்டாலும், அடுத்த சில ஆண்டுகளில் சாலைகளில் நெரிசல் அதிகரித்துவிடும். வாகனங்கள் கட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், பொதுப்போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். அதை மக்கள் பயன்படுத்து வதற்கு வசதியானதாக மாற்ற வேண்டும். அதை அரசுகள் செய்ய வேண்டும்.

யுத்த மரணங்களைவிட...

ஒரு பேருந்து 60 பேரை ஏற்றிச் செல்கிறது. இருச்சக்கர வாகனமாக இருந்தால் 60 வண்டிகள் தேவை. கார்  வாகனமாக இருந்தால் ஒரு பேருந்தின்  இடத்தை 30 கார்கள் அடைத்துக் கொள்கின்றன. யுத்த மரணங்களை விட  மிக அதிகமாக சாலை போக்கு வரத்தில் மரணம் நிகழ்கிறது. வாகன  பெருக்கத்தால், தமிழ்நாட்டில் சென்னையில் நுரையீரல், புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க, சுற்றுச்சூழலை பாது காக்க வேண்டும். அடுத்த தலை முறைக்கு பூமியை பூமியாக கொடுக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து சீரழிந்து  இருப்பதால், இருச்சக்கர வாகனம், கார் உள்ளிட்ட தனிப் போக்குவரத்து அதி கரித்திருக்கிறது. இதனைத் தவிர்க்க  பேருந்து, ரயில், நீர்வழிப் போக்கு வரத்தை அதிகரிக்க வேண்டும். அவ ற்றை மக்கள் பயன்படுத்தும்வகையில் விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் வேண்டும். இதன்காரணமாக வாகனப் பெருக்கம் குறைந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும். பொதுப் போக்குவரத்து என்பதை பொதுமக்க ளின் முழக்கமாக மாற்ற, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஓட்டம் நடத்தப்படு கிறது. இந்தியாவில் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து வலுவாக உள்ளது. இருப்பினும், அதை மேலும் வலுப்படுத்த வேண்டும். இவற்றோடு பொதுத்துறைகளை பாதுகாக்க வேண்டும. போக்குவரத்து, பால், தண்ணீர் விநியோகம் போன்றவற்றை பொதுத்துறைகள் வாயிலாக மட்டுமே வழங்க முடியும்.  கேந்திரமான, கனரக, பாதுகாப்பு, துறைமுகம், ரயில்வே போன்ற அடிப்படையான தொழில்கள் பொதுத்துறையாக நீடிக்க வேண்டும். பொதுப்போக்குவரத்தை மக்களின் முழக்கமாக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

மேம்பாலங்கள் தீர்வல்ல

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் கூறுகையில், “இந்தியாவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 1.50 லட்சம் பேர் உயிரி ழக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில்  17 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க, விபத்தை தவிர்த்திட, நெரிசலை குறைக்க  வேண்டுமானால் பொதுப்போக்கு வரத்து வலுப்பட வேண்டும். மேம்பாலம் அமைப்பதால் போக்கு வரத்து நெரிசல் குறையாது. மேம்பாலங்கள் ஒரு சந்திப்பில் உள்ள நெரிசலை, அடுத்த சந்திப்புக்கு மாற்றிச் செல்லும். நிரந்தர தீர்வு பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதுதான். பணக்காரர்கள் பொதுப்போக்கு வரத்தை பயன்படுத்துவதுதான் உண்மையான வளர்ச்சி. காற்று மாசு பாட்டால் ஆண்டு தோறும் உலகில் ஒரு கோடி பேர் உயிரிழக்கின்றனர். இந்தி யாவில் 36 லட்சம் பேர் இறக்கிறார்கள். இதை குறைக்க வேண்டுமானால், பொதுப்போக்குவரத்தை வலுப்படுத்த வேண்டும், அது அரசிடம் பொதுத் துறையாக இருக்க வேண்டும்” என்றார்.

இந்நிகழ்விற்கு அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், தொமுச பொருளாளர் கி.நடராஜன், சிஐடியு மாநில நிர்வாகிகள் எஸ்.கே.மகேந்திரன், சி.திருவேட்டை, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், அரசாங்க  போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வி.தயானந்தம், பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்டோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

தமிழ்நாடு முழுவதும்

சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்களின் சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங் களிலும் உற்சாகமிக்க மாரத்தான் ஓட்டங் கள் நடைபெற்றன. மதுரையில் நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நாகையில் கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி, புதுக் கோட்டையில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, தேனியில் திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்கள் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர். போக்குவரத்து சங்கங்களின் சிஐடியு தலைவர்கள் - நாகர்கோவிலில் சங்கரநாராயணபிள்ளை, சுரேஷ்; திரு நெல்வேலியில் காமராஜ், ஜோதி; விருதுநகரில் ஜி.வேலுச்சாமி, வெள்ளைத்துரை;

மதுரையில் வி.பிச்சை, கனகசுந்தர், பி.எம்.அழகர் சாமி; திண்டுக்கல்லில் ஐ.ஜெயக்குமார், ராமநாதன்; தேனியில் மணிகண்டன், கணேஷ்ராம்; காரைக்குடியில் சிவக்குமார், தெய்வவீரபாண்டியன்; புதுக்கோட்டையில் பாலசுப்பிரமணி, மணிமாறன்; திருச்சியில் சீனிவாசன், கருணாநிதி; தஞ்சாவூரில் மணிமாறன், காரல்மார்க்ஸ்; நாகப்பட்டினத்தில் எஸ்.ஆர்.ராஜேந்திரன், கோவிந்தராஜ்; கோயம்புத்தூரில் கனகராஜ், பரம சிவம்; வேளாங்கண்ணியில் ஊட்டி சுந்தரம், கணேசன்; ஈரோட்டில் முருகையா, ஜான் கென்னடி; சேலத்தில் கிருஷ்ணமூர்த்தி, செம்பான்;  தர்மபுரியில் சண்முகம், முரளி; உளுந்தூர்பேட்டையில் மூர்த்தி, ரகோத்தமன்; கடலூரில் பாஸ்கரன், முருகன், மணிகண்டன்; வேலூரில் பரசுராமன், ரவிச்சந்திரன்; காஞ்சி புரத்தில் சீனிவாசன்; செங்கல்பட்டில் நாராயணன் உள்ளிட்ட சிஐடியு போக்கு வரத்து சம்மேளன நிர்வாகிகள் தலைமையேற்றனர். ஈரோட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.  பல்வேறு இடங்களில் இந்த மாரத்தான் ஓட்ட நிகழ்வுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். மாநில செயற்குழு உறுப் பினர்கள், கோவையில் க.கனகராஜ், கடலூரில் எஸ்.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.