tamilnadu

img

வெண்மணியில் செவ்வணக்கம்

நாகப்பட்டினம், டிச.25 - நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழ்வெண்மணியில் 54 ஆம் ஆண்டு  வீரவெண்மணித் தியாகிகளுக்கு அஞ்சலி  செலுத்தும் நிகழ்வு ஞாயிறன்று நடை பெற்றது. 1968 டிசம்பர் 25 அன்று கீழ தஞ்சையில் நிலவி வந்த நிலப்பிரபுத்துவத்தின் உச்சகட்ட அராஜகமாக, கீழ்வெண்மணி கிராமத்தில் 44 ஏழை விவசாயத் தொழிலாளிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இத்துயரச் சம்பவத்தின் 54 ஆம் ஆண்டு நினைவு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன், விவசாயிகள் சங்க  மாநிலத் தலைவர் பெ.சண்முகம், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வ சிங், கே.பாலபாரதி, சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், கட்சியின்  நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரி முத்து, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி,   சிபிஐ மூத்த தலைவர் கோ.பழனிசாமி, விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், மாணவர் சங்க மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.முத்தையன், வடக்கு ஒன்றி யச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் உள்ளிட் டோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு  அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தீக்கதிர் சந்தா வழங்கல்

கீழ்வெண்மணி தியாகிகள் நினை விடத்தில் சிபிஎம் நாகை மாவட்டக் குழு சார்பில் உழைக்கும் வர்க்கத்தின் கருத்து பேராயுத மாக விளங்கும் தீக்கதிர் நாளிதழின் ஆண்டு  சந்தா 213-க்கான தொகை ரூ. 4,26,000-ஐ மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து வழங்கி னார். 

ஏப்.5 பேரணியை விளக்கி மண்டல கருத்தரங்கம்

இதைத்தொடர்ந்து வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இந்திய தொழிற் சங்க மையம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் சார்பில் மண்டல கருத்தரங்கம் நடைபெற்றது. உழைப்பாளி வர்க்கத்தின் தியாக அடை யாளச் சின்னமாய் திகழும் கீழ்வெண்மணி யில் மக்கள் விரோத, தேச விரோத, பாசிச பாஜக அரசை அகற்றிட தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2023  ஏப்ரல் 5 ஆம் தேதி தலைநகர் தில்லியில் நடை பெறும் பேரணியை விளக்கி இக்கருத்தரங்கம் நடைபெற்றது.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வி.சுப்பிரமணி யன் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச் செய லாளர் சி.ஜெயபால் வரவேற்புரை ஆற்றி னார். சிஐடியு நாகை மாவட்டச் செயலாளர் கே. தங்கமணி, விச நாகை மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிரமணியன், வி.தொ.ச நாகை மாவட்டச் செயலாளர் எம்.முருகையன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், விச மாநில துணைச் செய லாளர் டி.ரவீந்திரன், விதொச மாநிலத் தலை வர் ஏ.லாசர், சிஐடியு மாநில பொதுச் செயலா ளர் ஜி.சுகுமாறன், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், விதொச மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்த லிங்கம் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். விதொச மாநில பொருளாளர் சங்கர் நன்றியுரை ஆற்றினார்.

 

தீக்கதிர் ஆண்டு சந்தா 213-க்கான தொகை ரூ. 4,26,000-ஐ மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து வழங்கினார். 

தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு சிபிஎம் தலைவர்கள் மலர்வளையம் வைத்தனர்.

சிபிஎம் நாகை மாவட்டக் குழுவின் சார்பில், புதிதாக கட்டப்பட்ட ராமையாவின் குடிசை நினைவகத்தில் தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர் கோ.பழனிச்சாமி, திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் செவ்வணக்கம் செலுத்தினர்.

வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம் சார்பில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் மாநில தலைவரும் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினருமான  ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலச் செயலாளர் அ.பழநிசாமி, மாநில துணைத் தலைவர்கள் ஜி.ஸ்டாலின் , எம்.முத்து ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

வெண்மணியில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், ராமையாவின் தம்பியும் தற்போது கீழ்வெண்மணி தியாகிகள் நினைவிடங்கள் மற்றும் வளாகங்களின் பாதுகாவலருமான சேதுபதி உயிர் நீத்த தன் ரத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.