tamilnadu

கொடநாடு வழக்கு: 202 சாட்சிகளிடம் விசாரணை நிறைவு

ஊட்டி, மார்ச் 26- கொடநாடு வழக்கு விசாரணையில் இதுவரை 202 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறினார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி,  பிஜின் மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதய குமார், சந்தோஷ்சாமி ஆகிய 10 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரு கிறது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபு முன்னிலையில் சயான், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மீதம் உள்ள 8 பேர் ஆஜராகவில்லை. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான், கனகராஜ், ஆஜராகினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் திபு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து நீதிபதி கேட்ட றிந்தார். இதை தொடர்ந்து, வழக்கு விசார ணையை அடுத்த மாதம் 23 ஆம் தேதிக்கு  தள்ளி வைத்தார். இதுகுறித்து, அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கொடநாடு வழக்கு விசாரணையில் இதுவரை 202 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சில முக்கிய நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் பல செல்போன்களும் கிடைத்துள்ளன. மின்னணு ஆதாரங்கள், தொலைத்தொடர்பு போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவது குறித்தும் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. தடயங்களை சேகரிக்கவும், கூடுதல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டது. அதன்படி  நீதிபதி வழக்கை அடுத்த மாதம் 23-ந் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.