11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்'
முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, மே 26- தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களை திங்களன்று (மே 26) சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உயர்கல்வித் துறை சார்பில், கட லூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட் டத்தில் குன்னூர், திண்டுக்கல் மாவட் டத்தில் நத்தம், சென்னை மாவட்டத் தில் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டத் தில் விக்கிரவாண்டியில் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திரு விடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங் களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 11 புதிய அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளை முதலமைச்சர் ஸ்டாலின் திங்களன்று திறந்து வைத் தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல மைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கள் கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகா னந்தம், உயர்கல்வித்துறை செயலா ளர் சமய மூர்த்தி மற்றும் உயர் அதி காரிகள் கலந்து கொண்டனர்.