tamilnadu

img

400 செம்மலர், 150 மார்க்சிஸ்ட் விருதுநகரில் ரூ.1.10 லட்சம் வழங்கல்

விருதுநகர், ஏப்.20- விருதுநகரில் அரசியல், தத்துவம், கலை இலக்கியம், பண்பாடு குறித்த கருத்தரங்கம் மற்றும் இலக்கிய மாத இதழான செம்மலர், தத்துவ மாத இதழான மார்க்சிஸ்ட் ஆகியவற்றிற்கான சந்தா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் விருதுநகர் எம்.ஆர்.வி.  நினைவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குரு சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் வரவேற்புரை யாற்றினார். மாநிலச் செயற்குழு உறுப் பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் 400 செம்மலர் சந்தாவுக்கான தொகை ரூ.90 ஆயிரம் மற்றும் 150 மார்க்சிஸ்ட் சந்தா தொகை ரூ.20 ஆயிரத்து 250 என மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 250-ஐ மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமனிடம் வழங்கப்பட்டது.