tamilnadu

img

கேரள ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் காவிக்கொடி உடனான ‘பாரத அன்னை

கேரள ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில்  காவிக்கொடி உடனான ‘பாரத அன்னை

மேடையிலேயே அமைச்சர் சிவன்குட்டி எதிர்ப்பு

திருவனந்தபுரம், ஜூன் 19 - சாரணர் இயக்கம் மற்றும் வழிகாட்டிகள் நிகழ்ச்சியில், ஆர்எஸ் எஸ் பயன்படுத்தும் காவிக்கொடியுடனான பாரத அன்னையின் படம் பயன்படுத்தப் பட்டதற்கு கேரள கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி மேடையிலேயே கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். கேரள ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் தளமாக்கும் முயற்சியை ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அதனொரு பகுதியாகவே, ஆர்எஸ்எஸ் அமைப்பால் பயன்படுத்தப்படும் காவிக் கொடியுடன் கூடிய பாரத அன்னையின் படம், சாரணர்  மற்றும் வழிகாட்டிகள் நிகழ்வின் மேடை யில் ஆளுநர் மாளிகையால் நிறுவப் பட்டது. இந்நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்வைப் புறக்கணித்தார். கடந்த சுற்றுச்சூழல் தினத் தன்றும், ஆளுநர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் இந்தப் படத்தை ஆளுநர் வைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது, அன்று வேளாண் அமைச்சர் பி. பிரசாத், நிகழ்வைப் புறக்கணித்திருந்தார்.  அப்போதே கேரள அரசாங்கம் தரப்பில் ஆளுநர் மாளிகைக்கு கடும்  எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  இனிமேல் தாங்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் இந்தப் படம் இருக்காது என்று ஆளுநர் மாளிகை உறுதியளித் திருந்தது. ஆனால், அந்த உறுதிமொழியை மீண்டும் ஆளுநர் மாளிகை மீறியுள்ளது.

நாட்டை அன்னையாக சித்தரிப்பது அரசியலமைப்பு ஏற்கவில்லை

இதற்கு முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பில் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.  “ஆளுநர் மாளிகையை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தப்படும் இடமாக மாற்றக்கூடாது. ஆளுநர் மாளிகை முக்கிய நிர்வாக மையம். அதன் அனைத்து நடவடிக்கைகள், பொருள்கள் மற்றும் சின்னங்களும் பொதுவாக நாட்டிற்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும். ஆளுநர் மாளிகை அரசியல் பிரச்சாரத்திற்கான தளமாக இருக்கக் கூடாது. இத்தகைய போக்கு அரசியலமைப்பிற்கு ஒரு சவாலாகும். பாரதத்தை அன்னையாக சித்தரிப்பது அரசியலமைப்புச் சட்டம் ஆதரிக்கும் ஒன்றல்ல. அரசிய லமைப்பால் பரிந்துரைக்கப்படாத எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று முதலமைச்சர் பினராயி விஜயன் காட்டமாக கூறியுள்ளார்.