tamilnadu

‘கல்விதான் மிகப்பெரிய சொத்து; எதற்கும் துவண்டு விடக் கூடாது’

‘கல்விதான் மிகப்பெரிய சொத்து; எதற்கும் துவண்டு விடக் கூடாது’

மாணவர் - பெற்றோர்க்கு முதல்வர் குறுஞ்செய்தி

சென்னை, மே 9 - பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்க ளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.  அதில், “தேர்ச்சி பெற இயலாத மாணவர்களே துவண்டு விடாதீர்கள். உடனடியாக துணைத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுங்கள். நீங்களும் உயர்கல்வி பெற்று வாழ்வில் வெற்றி பெற்றே தீருவீர்கள். அதற்கான வாய்ப்புக ளை நமது அரசு உறுதி செய்யும் - தமிழ்நாடு முதல்-அமைச்சர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பெற்றோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் குரல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம்.. நான் உங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறேன். உங்கள் பிள்ளைகள் தேர்ச்சி அடைந்த செய்தி கேட்டு உங்களைப் போலவே (பெற்றோர்கள்) நானும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தேன். உங்கள் பிள்ளை களை கட்டாயம் மேற்படிப்புகளில் சேர்க்க வேண்டும். தமிழக அரசு அதற்கு பல திட்டங்களை வைத்துள்ளது. அவற்றை யெல்லாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்று இந்த தருணத்தில் உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும், “கல்விதான் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்  கொடுக்கிற மிகப்பெரிய சொத்து. யாராலும் அழிக்க முடியாத சொத்து. உங்களுக்கு உதவ எல்லா வகையிலும் தமிழக அரசு தயாராக இருக்கிறது. வளமான எதிர்காலம் நோக்கி உயர் கல்வியில் காலடி எடுத்து வைக்க உள்ள உங்கள் பிள்ளைக ளுக்கும், உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரி வித்துக் கொள்கிறேன். நன்றி.. வணக்கம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.