மதுரை, நவ.1- மதுரையில் தெற்கு மாசி வீதி, விளக்குத் தூண், கீழமாசி வீதி ஆகிய பகுதிகளில் அதிகப்படி யான ஜவுளி விற்பனை கடைகள் மற்றும் சாலை யோர கடைகள், மளிகை கடைகள் என்று ஆயிரக் கணக்கான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை நகரின் மையப்பகுதி என்பதால் மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள், தீபாவளி பண்டிகையையொட்டி, இங்கு பொருட்கள் வாங்குவதற்கு லட்சக்கணக் கில் குவிந்து விடுவர். அதிகளவில் மக்கள் கூடுவ தாலும், அதிகளவில் கடைகள் இருப்பதாலும் இப்பகுதியில் அதிக குப்பைகள் தேங்குவது வழக்கம். இக்குப்பைகளை அகற்றுவதற்கு மாநக ராட்சி தூய்மைப் பணியாளர்கள் முன் வந்தா லும், அதிகப்படியான குப்பைகள் தேங்குவதால், அவர்கள் மட்டுமே அதை அப்புறப்படுத்துவதில் மிகப்பெரும் சிரமங்கள் நீடிக்கின்றன. எனவே அவர்களுடைய சிரமத்தை போக்கி டும் வகையில், கடந்த 4 ஆண்டுகளாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை மாநகர் சார்பில், நூற்றுக்கணக்கான தோழர்கள், மாநக ராட்சி தொழிலாளர்களுடன் இணைந்து இப்பகுதி களில் குப்பைகளை அகற்றும் பணியில் தொ டர்ந்து ஈடுபட்டனர்.
5 ஆவது ஆண்டாக தூய்மைப் பணி
தற்போது, 5 ஆவது ஆண்டாக இப்பணியை மாநகராட்சி தொழிலாளர்களுடன் இணைந்து சுமார் 80-க்கும் மேற்பட்ட தோழர்கள் குப்பை களை அகற்றும் பணியில் தீபாவளி மறுநாளான நவ.1 (வெள்ளி) அன்று ஈடுபட்டனர். இதுகுறித்து அமைப்பின் மாவட்டச் செயலா ளர் டி.செல்வா கூறுகையில், “தொடர்ந்து ஐந்தாண்டுகளாக, இப்பகுதியில் சேரும் குப்பை களை அகற்றுவதற்கு மாநகராட்சி தூய்மைப் பணி யாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறோம். குறிப்பாக மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பண்டிகை காலங்களில்கூட ஓய்வின்றி பணியாற் றுகிறார்கள். எனவே அவர்களின் பணிச் சுமையை குறைக்கும் நோக்கத்தோடு இந்த பணியை நாங்கள் ஐந்தாண்டுகளாக செய்து வருகிறோம். இத்தூய்மைப் பணியில் தூய்மைப் பணியா ளர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது வாலிபர் சங்கத்திற்கு பெருமையாக உள்ளது. இங்கு சேரும் குப்பைகள் அதிக துர்நாற்றம் வீசக்கூடிய வகை யில் உள்ளன. அதை எப்படி அவர்கள் அள்ளு கிறார்கள் என்பதை, இந்த ஒரு நாளில் எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஆண்டு முழுவதும் இவ்வளவு கடுமையான பணியை அவர்கள் செய் கிறார்கள். அந்த வகையில்தான், தீபாவளியை யொட்டி நகரின் முக்கிய பகுதியான விளக்குத் தூண் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சேரும் குப்பைகளை அகற்றுவதற்கு நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். குப்பைகளை அகற்றும் பணியில் மாவட்டத் தலைவர் அ.பாவல் சிந்தன், பொருளாளர் எஸ். வேல்தேவா ஆகியோர் தலைமையில் சுமார் 60 -க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இப்பணியை சிஐடியு மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணி யம், 23 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, மாநகராட்சி ஊழியர்களும், அப்பகுதியில் டன் கணக்கில் குவிந்த குப்பை களை அகற்றினர். தொடர்ந்து இப்பணியில் ஈடுபட்ட வாலிபர் சங்க தோழர்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலா ளர் மா.கணேசன், பகுதி குழு செயலாளர்கள் பி. ஜீவா, வி.கோட்டைச்சாமி, கு.கணேசன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்தினர்.
வாலிபர் சங்கத்தினருக்கு நன்றி...
அப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டி ருந்த தூய்மைப் பணியாளர்கள் சிலர் கூறுகை யில், “இப்பகுதியில் இருக்கும் வார்டு வாரியாக, இன்று எங்களுக்கு கடுமையான பணி இருந்தா லும், இங்கு முடிந்துவிட்டால் அடுத்த பகுதிக்கு அதி காரிகள் அனுப்பி விடுவார்கள். நகரின் முக்கிய பகுதியான இங்கு குப்பைகளை அப்புறப்படுத் துவதற்கு, ஒவ்வொரு ஆண்டும் வாலிபர் சங்கத்தி னர் எங்களுக்கு உதவி செய்கிறார்கள். அந்த தோழர்களுக்கு தூய்மைப் பணியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இங்கு சேரும் குப்பைகளை அகற்றுவது மிகப் பெரிய பணி. இதற்குரிய உபகரணங்கள் இல்லா தது பெரும் குறையாக உள்ளது. உதவிக்கு வந்துள்ளவர்களுக்குகூட சரியான உபகர ணங்கள் கொடுக்க முடியவில்லை. இப்பகுதியில் கிடைக்கும் பாய், சாக்கு போன்றவைகளில்தான் அவர்கள் குப்பைகளை சேகரித்து எடுத்துச் சென்று, வண்டிகளில் கொட்டுகிறார்கள். போதிய உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் இருந்தால் இன்னும் பணிகள் எளிதாக முடியும்.
குப்பைகளை பைகளில் சேகரித்து கொடுக்கலாம்...
அதேபோல் தீபாவளி அன்றுகூட எங்களுக்கு விடுமுறை இல்லை. பண்டிகை காலங்களில்கூட எங்களுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து இருக்க முடியவில்லை. அதுதான் ஒரு பெரும் குறையாக உள்ளது. டெங்கு ஒழிப்புக்கு வீடு களுக்குச் சென்று மருந்து கொடுக்கும் பணி யாளர்களைகூட தற்போது தூய்மைப் பணியில் ஈடுபடுத்துகிறார்கள். எனவே இது போன்ற நேரங்களில் பொதுமக்களும் சற்று ஒத்துழைப்பு கொடுத்து, குப்பைகளை தெருக்களில் ஆங் காங்கே போடாமல், அவைகளை ஒரு பைகளில் சேகரித்து கொடுத்தால் எங்களுக்கும் வேலை எளிதாக இருக்கும். மேலும் பட்டாசுகளை வெடித்துவிட்டு ஆங் காங்கே குப்பைகளை போடுவதை தவிர்த்து வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளை ஓரிடத்தில் குவித்து வைத்துவிட்டால் நாங்கள் அள்ளிச் செல்வதற்கு எளிதாக இருக்கும். வரும் காலங்களில் மக்களும் மாநகராட்சி நிர்வாகமும் இதனை புரிந்துகொண்டு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்” என்றனர்.