tamilnadu

img

புனேவில் உள்ள பள்ளிகள் திறப்பு டிசம்பர் 13 வரை மூடப்படுகிறது

பள்ளிகள் திறப்பு குறித்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, தீபாவளிக்கு பின்பு தொற்றுகள் எண்ணிக்கை அதிகரிப்பால் பள்ளிகளை மீண்டும் திறப்பதை ஒத்திவைக்க புனேவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பள்ளிகள் திங்களன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது, பள்ளிகளை டிசம்பர் 13 வரை மூடப்படும் என நகர மேயர் முர்லிதர் மோஹல் தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநிலங்கள் பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. இந்த இந்நிலையில், புனேவில், பள்ளிகளை வரும் திங்களன்று திறப்பதாக அறிவித்திருந்த நிலையில், பெற்றோர்களுடன் கலந்து பேசி, கொரோனா தொற்றின் வீரியத்தை கருத்தில் கொண்டு டிசம்பர் 13 வரை பள்ளிகள் மூடப்படும் என அறிவித்துள்ளது.
 

;