tamilnadu

img

மகாராஷ்டிரா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர், 7 பேர் காயமடைந்தனர்.
 மகாராஷ்டிர மாநிலம் சோப்ரா, ஃபைஸாபூர் சாலையில் ஹிங்கோலா அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு எஸ்யூவி ரக காரும், எதிரே வந்த  டிரக்கும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.