tamilnadu

img

நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

நிவாரண தொகை வழங்கக்கோரி

சேலம், மே 11-  அரசு அறிவித்த நிவாரணம் வழங்கா ததால் விரக்தியடைந்த ஆட்டோ தொழிலா ளர்கள், சேலத்தில் நல வாரிய அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு இருந்த  சூழலில் தமிழக அரசு தொழிலாளர்க ளுக்கு நிவாரண உதவிகளை அறிவித்தது. குறிப்பாக, ஆட்டோ தொழிலாளர்கள், கைத்தறி, விசைத்தறி, கட்டுமானம், பொற் கொல்லர், மண்பாண்டம் செய்பவர்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட கூலி தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் நிவாரணமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட தொழிலாளர் கள் மாவட்ட நல வாரிய அலுவலகத்தில் வாட்ஸ் அப் மூலம் மனுக்களை அனுப்பி னர். 

இந்நிலையில், சேலம் மாவட்டத்தின் புறநகர் மற்றும் மாநகர் பகுதிகளில் 90  சதவிகிதத்திற்கும் அதிகமான தொழிலா ளர்களுக்கு இதுவரை எந்த நலவாரிய பலன் களும் கிடைக்கவில்லை. இதேபோல் அரசு அறிவித்த நிவாரணத் தொகை, மளிகை பொருட்கள் எவையும் வழங்கப்படாததால் பெரும் அதிருப்திக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் திங்களன்று சேலம்  கோரிமேடு பகுதியில் உள்ள தொழிலா ளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். அப்போது. அனைவருக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் ஓரிரு வாரங்களில் அனைவ ருக்கும் நிவாரணத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில் முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டு கோரிக்கை மனுவாக நல வாரிய அதிகாரியிடம் வழங்கப்பட்டது.

திருப்பூர்

இதேபோல், ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உடனே ஒரு ஆட்டோ தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.15 ஆயிரம் வழங்க தமிழக அரசு நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் சிஐடியு ஆட்டோ சங்கத் தலைமை அலுவலகத்தின் முன்பாகவும், அந்தந்த பகுதி ஆட்டோ நிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில்  திருப்பூர் மாவட்ட ஆட்டோ சங்க மாவட்டத்  தலைவர் டி.வி.சுகுமார், மாவட்ட செயலா ளர் சிவராமன், மோட்டார் சங்க மாவட்ட செயலாளர் ஒய்.அன்பு, நிர்வாகிகள் ஜெயக்குமார், லாரன்ஸ், முத்துச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும், சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்டம் முழுவ தும் நலிவடைந்த தொழிலாளர் குடும்பத்தா ருக்கு உணவுப் பொருட்களும் வழங்கப்பட் டது.