tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சி புதிய கிளைகள் அமைப்பு

தரங்கம்பாடி, ஜூன் 24- மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய கிளை அமைப்பு மற்றும் கொடி யேற்ற நிகழ்ச்சி புதனன்று நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இளந்தோப்பு ஊராட்சியில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் கோ.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சீனிவாசன் கொடியேற்றி உரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்ட குழு உறுப்பினர் து.கணேசன், வட்டச் செயலாளர் சி.மேக நாதன், வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.மணி, ஆர்.கோவிந்த சாமி, ஆர்.ரவீந்திரன், தே.துரைக்கண்ணு, அ.அறிவழகன், ம.மாரியப்பன், ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் வ.பழனி வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதே போல் கட்சியின் நமச்சிவாயபுரம் ஊராட்சி புதிய கிளையில் கொடியேற்று நிகழ்ச்சி கிளைச் செயலாளர் ம.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.