மேட்டூர், நவ.12- கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் ஹேரங்கி உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதனையடுத்து அணை களின் பாதுகாப்பு கருதி உபரிநீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டதால் மேட்டூர் அணை கடந்த செப்டம்பர் 7, 24 மற்றும் அக்டோபர் 23- ஆகிய தேதிகளில் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது வட கிழக்கு பருவ மழையால் மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் மேட்டூர் அணை நான்காவது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.