tamilnadu

img

ஐசிடிஎஸ் திட்டத்திற்கு நிதி குறைப்பு மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தருமபுரி, பிப். 11- மத்திய பட்ஜெட்டில் ஐசிடிஎஸ் திட்டத்திற்கு நிதிகுறைத்ததை கண்டித்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டனர். மத்திய அரசு தொழிலாளர் களையும் உழைப்பாளி மக்க ளையும் வஞ்சிக்கக்கூடிய வகையில்  பட்ஜெட்டைஉருவாக்கியுள்ளது. எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை  நிறுவனஙகளை தனியாருக்கும்  விற்க முயற்சி, அங்கன்வாடி, சத்துணவு, ஆஷா போன்ற திட்டங் களுக்கு நிதியை குறைத்துள்ளது.மேலும் ஏழை மக்களின் வாழ்வாதாராமான நூறு நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி  குறைத்துள்ளது. குறிப்பாக அங்கன் வாடி திட்டத்துக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.60 ஆயிரம் கோடி நிதியை குறைத்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்துள்ளது. விலைவாசி உயர்வுக்கேற்ப நிதியை உயரத்து வதற்கு பதிலாக நிதியை குறைத் துள்ளது.

இதனால் குழந்தைகள், கர்ப்பிணி பெண்களின் ஆரோக் கியம், நல்வாழ்வு கேள்வி குறி யாகும், எனவே மத்திய அரசு அங்கன்வாடித்திட்டத்துக்கு நிதி குறைத்ததை கண்டித்து ஆர்ப் பாட்டம்நடத்தினர். தருமபுரியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்துக்கு கே.கலைவாணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.தெய்வானை, மாவட்ட துணைத்தலைவர் டி.சுமதி,நிர் வாகிகள் செந்தாமரை, மலர்கொடி, சுசிலா,ராணி,ஆனந்தி ஆகியோர்  பேசினர். சிஐடியு மாவட்ட துணை தலைவர் பி.ஆறுமுகம் வாழ்த்தி பேசினார். காரிமங்கலத்தில் ஒன்றியத் தலைவர் துர்கா தலைமை வகித்தார். முன்னாள் மாநிலதலைவர் சி. அங்கம்மாள்,மாவட்ட இணைசெய லாளர் கவிதா, மாவட்டபொரு ளாளர் ஈஸ்வரி,ஒன்றியசெயலாளர் நந்தினி,ஒன்றியபொருளாளர் கண்மணி ஆகியோர் பேசினர். பென்னாகரம் ஸ்டேட் பேங்க்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு எம்.சி.கலைவாணி தலைமை வகித்தார்.மாநில செயலாளர் எம்.லில்லிபுஷ்பம், மாவட்டதலைவர் ஏ.தெய்வானை, மாவட்டதுணைத்தலைவர்கள் எம். சுமதி,எம்.ஜெயா ஆகியோர்  கோரிக் கைகளை விளக்கிப் பேசினர்.சிஐடியுமாவட்டதுணைதலைவர் சி. ராஜிகட்டுமான சங்க ஒன்றியசெய லாளர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.