tamilnadu

img

கர்நாடகாவில் கொரோனா காரணமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை இரட்டிப்பு

கர்நாடகாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட தொடக்கத்தில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் விலை இரட்டிப்பாகியுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு போதுமான ஆக்ஸிஜன் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசால் கூறப்பட்ட ஏழு மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்றாகும். அங்கு சில தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் விநியோகம் பற்றாக்குறையாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. மாநில அரசு சார்பில் உற்பத்தியை அதிகரிக்க சொன்னதாக கூறப்படுகிறது. இருப்பினும், சில மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நிரப்புவதற்கு சிரமப்படுவதாக தனியார் மருத்துவமனைகள் கூறியுள்ளது. சில மிகப் பெரிய தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே போதுமான ஆக்ஸிஜன் உள்ளதாகவும், நடுத்தர மருத்துவமனைகளில் மறு முறை ஆக்ஸிஜன் சிலிண்டர் நிரப்பலுக்கு சிக்கல்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸிஜன் விநியோகம் போதுமானதாக இருந்தாலும்கூட, ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் விலை அதிகமாக  உயர்ந்துள்ளது. பெரும்பாலான நோயாளிகளுக்கு இப்போது அதிக ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைப்படுகிறது. கொரோனாவிற்கு முந்தைய நாட்களில், நோயாளிகளுக்கு வழக்கமாக நிமிடத்திற்கு 10 லிட்டருக்கும் குறைவான ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. வழக்கமாக நிமிடத்திற்கு 4 லிட்டர் ஆக இருக்கும். இப்போது, ​​அவர்களுக்கு நிமிடத்திற்கு 15 லிட்டர் மற்றும் அதற்கு அதிகமாக தேவைப்படுகின்றன. நோயாளிகளுக்கு நிமிடத்திற்கு 40 லிட்டர் அளவுக்கு கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொரோனாவிற்கு, முந்தைய காலங்களில், ஒரு லிட்டருக்கு ரூ.18 முதல் ரூ.20 வரை இருந்தது. இப்போது அது இரு மடங்காகிவிட்டது. முக்கிய விற்பனையாளர்கள் தங்கள் செலவுகளை 40 சதவிகிதம்  அதிகரித்துள்ளனர். மேலும் மருத்துவமனைகள் புதிய சப்ளையர்களிடம் திரும்பியிருந்தாலும், அவர்களும் சிலிண்டருக்கு ரூ.40 வரை அதிகப்படுத்தி வாங்கி வருகிறார்கள்.

தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு, ஆக்ஸிஜன் விநியோகம் மூலம் ஒரு படுக்கைக்கு 10 ஆயிரம் மற்றும் அதிக தேவை இருந்தால் ரூ.12 ஆயிரத்தி 600 வசூலிக்க வேண்டும் என அரசு தெரிவித்திருந்தது. ஆனால், நோயாளிகளிடம் பணத்தை செலுத்தும் போது 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.