புதுதில்லி, அக்.20- பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகினர். இந்திய ராணுவம், காஷ்மீரை ஒட்டி அமைந்துள்ள எல்லைப் பகுதியில் துருப்புகளை அதிகரித்திருப்பதோடு கண்காணிப்பையும் தீவிரப்படுத்தி யுள்ளது. இந்நிலையில், சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லையில், இந்திய துருப்புகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் டாங்தார் மண்டலத்திற்குட்பட்ட குப்வாரா பகுதி யில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. எல்லைக்கு அப்பாலிருந்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில், ராணுவ நிலை களுக்கு அருகில் இருந்த இரண்டு வீடுகள் பலத்த சேதமடைந்தன. இந்த சம்ப வத்தில், குப்வாரா பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.