tamilnadu

img

தேசிய எதிர்ப்பு தினம்: இன்று மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை,ஜூலை 2-  அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று (ஜூலை 3) நடைபெறும் தேசிய எதிர்ப்பு தினத்தில் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடு கின்றனர்.  இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் ஜூன் 28 அன்று மாநிலத் தலை வர் மு.அன்பரசு தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவு கள் எடுக்கப்பட்டன.

மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழி யர்களின் சலுகைகளை பறிக்கின்ற அரசா ணையை திரும்பப் பெற வேண்டும். குறிப்பாக 18 மாதங்கள் அகவிலைப்படி முடக்கம். பல மாநில அரசுகள் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதி கரித்ததை ரத்து செய்ய வேண்டும்.  வேலை இழந்த 40 கோடி ஏழை குடும்பங்க ளுக்கு ஆறு மாதங்களுக்கு உணவுப் பொ ருள்கள் இலவசமாக வழங்க வேண்டும்.இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கின்ற அரசு ஊழியர் வேலை நியமன தடைச்சட்டத்தை  கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் அனைத்து தொழிற் சங்கங்கள் நடத்தும் தேசிய எதிர்ப்பு தினத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அரசு அலுவலகங்கள்  முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.

 ஜூலை 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஊழியர் சந்திப்பு இயக்கம் நடத் தப்படுகிறது.  கடந்தாண்டு ஜாக்டோ ஜியோ  போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசு ஊழி யர் சங்க முன்னாள் மாநிலத் தலைவரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான எம்.சுப்பிரமணியன் மீதான அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக தற்காலிக பணி நீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர் ,ஆசிரியர்களின் மீது போடப்பட்ட 17 பி குற்ற குறிப்பாணை வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். 

கொரானா காலத்தில் மருத்துவத் துறையில் பொது சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர் ,செவிலியர்கள்,லேப் டெக்னீசியன்களை நிரந்தரமாக காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். கொரோனா பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள்,பிபிஇ கிட் வழங்கவும் உரிய போக்குவரத்து வசதிக ளை அரசு செய்து தரவேண்டும் என்று வலி யுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. 

ஜூலை 14 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முதலமைச்சருக்கு  கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட உள்ளது. அரசினுடைய அனைத்து பணிகளையும் மக்களிடம் கொண்டு செல்லக்கூடிய பணி யை மிகச்சிறப்பாக செய்து கொண்டி ருக்கும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.