பேரீச்சம்பழத்திற்குப் போகும் 48 லட்ச ரூபாய் ‘ஜாகுவார்’ கார்
புதுதில்லி, நவ.9- 2014 முதல் 2019 வரையிலான மோடியின் முதலாவது ஆட்சிக் காலத்தில், மக்களவை சபா நாயகராக இருந்தவர் சுமித்ரா மகாஜன். தற் போது தீவிர அரசியலிலிருந்து விலகிவிட்டார். ஆனால் இவர் சபாநாயகராக இருந்த போது 2016-இல் இவருக்காக ‘ஜாகுவார்’ எனும் மிக காஸ்ட்லியான கார் வாங்கப்பட்டது. அப்போது அதன் விலை 48 லட்சம். ஏற்கெனவே சுமித்ரா வைத்திருந்த ‘டொயோட்டா கேம்ரி’க்கு பதிலாக இந்த கார் வாங்கப்பட்டது. ஜாகுவார் காரில் பயணம் செய்த மறு நாளே, அவர் மீண்டும் அந்தக் காரில் ஏறுவதற்கு மறுத்து விட்டார். “இந்த காரில் இயல்பாக உட்கார முடிய வில்லை. கால் வைக்கும் இடம் மிக குறைவாக இருக்கிறது” என்று கூறிவிட்டார். அது மட்டுமல்ல, “தான் தேர்ந்தெடுத்தது ஒரு மாடல். ஆனால் என் அலுவலகம் வேறு மாடல் காரை வாங்கிவிட்டது” என்றும் பழியைத் தூக்கி அதி காரிகள் மீது போட்டுவிட்டார். இதனால், சுமார் இருபத்தைந்து கிலோ மீட்டருக்கும் குறைவாகவே இதுவரையில் ஓடி யிருக்கும் அந்த கார், இரண்டாண்டுகளாக ஷெட்டிலேயே தூங்குகிறது. இப்படியே விட்டால் அதனை பழைய இரும்புக் கடைக்கு, பேரீச்சம்பழத்திற்குத்தான் போட வேண்டியது இருக்கும் என்று ஊழியர்கள் கூறுகின்றனர். 48 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட ‘ஜாகு வார்’ கார் புத்தம் புதிதாக அப்படியே இருக்கும் நிலையில், புதிய சபாநாயகர் ஓம் பிர்லா வுக்காக, தற்போது மறுபடியும் முப்பத்து ஆறு லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ‘டொயோட்டா கேம்ரி ஹைபிரிட்’ கார் வாங்கப்பட்டுள்ளது.